tag:blogger.com,1999:blog-36819641832580022792024-02-18T18:22:39.977-08:00THAIMADYஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.comBlogger216125tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-51342103294158081342021-11-21T05:01:00.002-08:002021-11-21T05:13:45.568-08:00மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்கு விதி முறைகள்<img src="blob:https://www.blogger.com/a91fe407-c9da-46fb-a48d-d1a8d8db3251" /> மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்கு விதி முறைகள்
இதய கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்! மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவாகிப்பவர்கள்.
-தழிழீழ தேசிய தலைவர்
எமது வீர விடுதலை வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டு இருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல
இந்த வீரர்களின் சாவு, எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர் மூச்சாக, எமது போரளிகளின் உறுதிக்கு உத்வேகம் அளிக்கும் ஊக்க சக்தியாக அமைந்து விட்டன. இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாதவர்கள், சுகந்திரச் சிற்பிகள், எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள். எமது இனத்தின் சுகந்திரத்திற்காக, சுய கௌரவத்திற்காக, பாதுகப்பிற்காக தமது இன்னுயிரை ஈர்ந்துள்ள இந்த மகத்தான தற்கொடையளர்கள் (தியாகிகள்) காலம், காலமாக எமது இதயக் கோவிலில் வைத்துப் பூசிக்கபடவேண்டியவர்கள்.
ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனித பிறவி அல்ல, அவன் ஓர் இலட்சியவாதி, ஓர் உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன், மற்றவர்களின் விடிவிற்காக, விமோசனத்திற்காக வாழ்பவன், சுயநலமற்ற, அவனது வாழ்க்கை உன்னதமானது. அர்த்தமுள்ள சுகந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தன் உயிரையும் அர்பணிக்க துணிகிறான். எனவே, விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள், அசாதாரணமான பிறவிகள்.
“புலிகளின் தாகம் தமிழ்ழீழ தாயகம்”
வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலை புலிகள்.
மாவீரர் நாள் கையேடு!
மாவீரர் நாள் (நவம்பர் 27)
மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டு கொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சிலைகளாய், ஓவியமாய் வெள்ளை மலரேந்திய வேதங்களாய் ஈழமண்ணில் புது விதையாய் விடுதலையின் தீச்சுடராகி தேசமங்கும் சோதியாய் நிற்பவரே மாவீரராவார்.
ஏன் இவர்கள் மாவீரர்கள்?
தமிழ் இன விடிவுக்காய் மரணித்தவர்கள். தேசம் தூங்கியபோது விழித்திருந்தவர்கள். உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறை போட்டவர்கள். தேச மக்களின் பாசப் பிணைப்புகளுக்காக தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள். பள்ளிப் பராயத்தை பள்ளித் தோழருக்காய் பறிகொடுத்தவர்கள் ஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள். எல்லை சுற்றி வேலிச் சிலையாய் நின்றவர்கள். தமது மக்களுக்காய் கால்களை, கரங்கைளை இழந்து நின்றவர்கள்! தேச விடுதலைக்காய் மரணித்த மாவீரர்களுக்கு தமிழீழ மண்ணில் மாவீரர் நாள் உறுதிப்பாடாயிற்று. இவ்வெழுச்சி நாளே தமிழீழத்தின் தேசிய நாளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
விடுதலைப் புலி வீரர்களில் முதலாவதாக வீரச் சாவெய்திய மாவீரர் சத்தியநாதனின் (சங்கர்) நினைவு நாளை நவம்பர் 27 ஐ தமிழீழ தேசம் மாவீரர் நாளாக பிரகடனம் செய்துள்ளது.
வருடந்தோறும் இப்புனித நாளினை தமிழினம் உணர்வு பூர்வமாகக் கொண்டாடுகிறது. நினைவு கூருகின்றது. மாவீரர் நாளை எதிர்கொள்ளுதல் மாவீரர் நாளானது மாவீரர் எழுச்சி நாளாகத் தமிழீழம் எங்கும் கொண்டாடப்படுகிறது.
எழுச்சி மிகுந்த இந்த மாவீரர் எழுச்சி நாட்களானது நவம்பர் 25 இல் தொடங்கி நவம்பர் 27 இல் முடிவடைகின்றது. இம்மாவீரர் நாட்களைக் கொண்டாடும் முகமாக நவம்பர் 25 ஆம் நாளுக்கு முன்னதாகவே தமிழீழம் எங்கும் புனிதப்பட்டு விடுகிறது. மாவீரர் தூபிகள், நிழற்படங்கள் அமைந்த இடங்கள், இல்லங்கள், ஒழுங்கைகள், வீதிகள், கல்விக் கூடங்கள் ,பொது இடங்கள், காரியாலயங்கள் அனைத்தையுமே, மக்கள் அனைவரும் தனித்தும், ஒருமித்தும் புனிதமாக்கி விடுகின்றனர்.
இவையாவும் மாவீரர் நினைவாக அலங்கரிக்கப்பட்டு தமிழீழ நாடு புதுப் பொலிவுடன் விளங்கும்.
மாவீரர் நாள் எழுச்சி நாட்கள் 25 -27
ஆரம்ப நாள் காலை 8 மணிக்கு தேசியக் கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து மாவீரர் எழுச்சி நாட்கள் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகும். தமிழீழம் முழுவதும் எழுச்சிக் கோலம் பூண்டு பொலிவுடன் விளங்கும். அனைத்துத் தமிழீழ மக்களும் அலங்கரிப்பு நிகழ்ச்சியிலும் வீரவணக்க நிகழ்வுகளிலும் கலந்துகொள்வார்கள்.
இந்த நாட்களில் வேறு களியாட்டங்கள், கொண்டாட்டங்கள், எதுவும் நடைபெறமாட்டாது. தேவையற்ற கேளிக்கைகள் வேண்டத்தகாத சூழ்நிலைகள் மறைந்துவிடும். மதுச்சாலைகள் மூடப்பட்டு மது பாவிப்பதை நிறுத்திவிடுவார்கள்.
வீடுகள் தோறும் விடுதலைத் தேசிய கீதங்கள் ஒலிக்கும். மக்கள் பிரிவு, பிரிவாக, அமைப்புக்கள் ரீதியாக, ஆக்கபூர்வ வேலைத் திட்டங்களிலும், மற்றும், மாவீரர் நாள் நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர்.
பாடசாலைகள்.
ஆசிரியர்கள் மாவீரரின் மாண்பினையும் மாவீரர் நாளின் மகிமையையும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தெளிவினை ஏற்படுத்துவார்கள். பாடசாலைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
நவம்பர் 25 ஆம் நாள் காலை 9.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலும், பாடசாலைகளில் வீரவணக்கக் கூட்டங்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மாவீரர் நினைவாக சமூக சேவைகளிலும் ஈடுபடுவர். மாவீரருக்கு மலர் வணக்கம் செலுத்தும் பணியினை மாணவர்கள், பொது மக்களும், பொது நிறுவனங்களும், முழுமையாக இணைவதில் தேசியப்பற்று உரமேற்றப்படுகிறது.
தமிழீழ மாவீரர் நாள் நவம்பர்-27
தமது இன்னுயிரை ஈந்து தமிழீழ விடுதலைப் போருக்கு வீறு சேர்த்த மாவீரர்கள் அவர்களின் தலைமுறையிலேயே போற்றப்பட வேண்டும். அவர்களின் வீரங்களும் ஈகங்களும் அருஞ் செயல்களும் மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். அந்த மாவீரர்களின் பெற்றோர்களும் குடும்பத்தினர்களும் அவலப்படக் கூடாது என்ற நோக்கின் அடிப்படையில், எமது தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானது தான் மாவீரர் நாள்.
தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப்போன மாவீரர்களின் எண்ணிக்கை பத்து, நூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டு தோறும் அவரவர் நிறைவு நாட்களில் நினைவுகூர இயலாது என்ற நிலையில், அனைவரையும் ஒரே நாளில் நினைவு கூரக் கூடியதாக தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச் சாவடைந்த எமது இயக்க வீரர் லெப்ரினன்ட் சங்கர் (சத்தியநாதன்) அவர்களின் நினைவு நாளான நவம்பர் 27 ஆம் நாளை பொதுவான நாளாகத் தேர்ந்தெடுத்த எமது தலைவர் 1989 ஆம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை அறிவித்தார்.
விடுதலைப் போராட்டத்தில் உலகம் வியக்கும் வகையிலே புதிய வரலாறு படைத்து புதுமை சேர்த்து நிற்கும் எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மண் மீட்புப் போரிலே பல வெற்றிகளைக் குவித்துவரும் அதே நேரம், நாட்டை எல்லாத் துறைகளிலும் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களைத் தீட்டி வழிகாட்டி இயங்கி வருவதோடு தூய்மையான தேசிய விடுதலைப் போரை வீறோடு நடாத்தி, வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களைப் போற்றி நினைவில் நிறுத்தவும், அவர்களது பெற்றோரும் குடும்பத்தினரும் அல்லலுறும் நிலையை மாற்றவும் எனப், பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்தி வருகின்றனர்.
1989 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப்பெரிய நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ மக்களாலும், உலகாத் தமிழர்களாலும் உணர்வெழுச் சியுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப் படுவதற்கும் தமிழீழம், மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு.
ஏனைய நாடுகள் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும், எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு மத்தியிலும், பல்வேறு நெருக்கடிகளுக்கு கிடையிலும், போராட்டத்தையும் நடாத்திக் கொண்டு, தமிழ் மக்கள் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர்.
வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலும் இல்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டு நடுகற்கள் நாட்டப்பட்டு வழிபாடியற்றப்படுகின்றன. மாவீரர் நாளில் மாவீரர்களின் பெற்றோர் குடும்பத்தினர் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர்.
உலகில் எங்குமே தமிழீழ மாவீரர் நினைவுபோல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் அவர்களின் பெற்றொரும் குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ நடைபெறுவதாகவோ வரலாறில்லை.
மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும் நடைமுறை ஒழுங்குகளும்.
1989 ஆம் ஆண்டில் நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளாகவும் 1990 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27 ஆம் நாள் வரை மாவீரர் வாரமாகவும் தமிழீழ மக்களால் எழுச்சி நிகழ்வாக நடைபெற்றுவந்த தமிழீழ மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகள், 1995நவம்பர் மாதம் நிகழ்வின் நேரம் மாற்றப்பட்டது.
1995 ஆம் ஆண்டிலிருந்து, நவம்பர் 25 ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள்வரை மூன்று நாட்கள் தமிழீழ மாவீரர் நாள் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட விருக்கின்றன.
தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் எழுச்சி நாள் ஆரம்பமாகும்.
மாவீரர் நாள் தொடக்க நிகழ்வுகள்!
01. சுடரேற்றல்
02. தேசியக் கொடியேற்றல்
03. மலர் வணக்கம்
04. அக வணக்கம்
05. உறுதியுரை
06. நினைவுரை என்பன வரிசை ஒழுங்கில் மேற்கொள்ளப்படும்.
தொடக்க நிகழ்வுகள் மாவீரர் நாள் எழுச்சி நாட்களான மூன்று நாட்களிலும் நடைபெறும்.
தேசியக் கொடி ஏற்றல், மாவீரர் நாள் எழுச்சி நாட்களுக்கான நிகழ்வுகள் நவம்பர் 25 ஆம் நாளன்று காலை 8.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலுடன், ஆரம்பமாகும்.
மாவீரர் துயிலும் இல்லங்களில் 25 ஆம் நாள் காலை 8.00 மணிக்கு ஏற்றப்படும் தேசியக் கொடி நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.
இயக்கப் பணிமனைகள், தளங்களில் முதல் இரண்டு நாட்களிலும் மாலை 6.00 மணிக்கு கொடி இறக்கப்பட்டு, மறுநாள் காலை ஏற்றப்படும்.
நவம்பர் 27ஆம் நாள் காலையில் ஏற்றப்படும் கொடி, மாவீரர் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும். பொது நிறுவனங்களிலும் பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் பணி முடிந்த பின் பகல் 12.01 இன் பின்பாகவும் மாலை 6.00 மணிக்கு முன்பாகவும் தேசியக் கொடி இறக்கப்பட்டு மறுநாள் காலையில் ஏற்றப்பட வேண்டும்.
(தேசியக் கொடி ஏற்றுதல், இறக்குதல் தொடர்பான கூடுதலான விளக்கங்கள் தேசியக் கொடிப் பயன்பாட்டு விதிக் கோவை என்னும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.)
நினைவொலி எழுப்பலும் சுடரேற்றலும்
27ஆந் திகதி சுடரேற்றும் நேரத்தை தமிழீழ மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பர். மாலை 6.05 மணிக்கு தமிழீழம் எங்கும் சமகாலத்தில் அனைத்து ஆலய, தேவாலய மணிகளும், ஒரு மணித்துளி நேரம் ஒலி எழுப்பும். அந்த நேரத்தைத் தொடர்ந்து எல்லா மக்களும் அகவணக்கம் செலுத்துவார்கள்.
துயிலும் இல்ல மைதான நடுவில் – பீடத்தில் சற்று உயரமான பெரிய சுடர் நாட்டப் பட்டிருக்கும். மக்கள் வெள்ளம் உணர்வுக் கொந்தளிப்போடு மைதானத்தைச் சுற்றி நின்று தியாகங்களை நெஞ்சில் நினைத்திடத் தீச்சுடர் ஏற்றப்படும்.
அமைப்பின் முதன்மையானவர்கள் மத்திய சுடரை ஏற்ற மாவீரரின் பெற்றோர் உரித்துடையவர்கள் தீச்சுடரை சமகாலத்தில் ஏற்றுவர். சமகாலத்தில் ஒவ்வொரு இல்லங்களிலும் வாசலிலும் மாவீரரின் சுடரொளியை அனைவரும் ஏற்றுவர்.
சுடரானது சுவாலை விட்டெரியும். ஒவ்வொரு சுடர்களிலும் மாவீரர்களின் முகங்கள் பிரகாசிக்கும். தமிழீழம் முழுவதும் சுடரொளி ஓங்கிப் பரவும். மக்கள் குமுறி எழுந்து கண்ணீர் விட்டு நிற்க தியாகிகளின் காவியங்கள் ஒவ்வொரு தமிழீழ மக்கள் உணர்வுகளிலும் மீட்டப்படும்.
சுடரேற்றி தியாக தீபங்கள் இவை என்று கூறத்தக்கதாக நினைவுகூரப்பட வேண்டும். வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் போல தமிழீழமெங்கும் மாவீரர் சுடர்கள் இந்நேரத்தில் எங்கும் ஒளிர வேண்டும்.
சிட்டி விளக்கேற்றக் கூடிய இடங்களில் தொகையான சிட்டி விளக்குகள் ஏற்றி நினைவு கூரலாம். வாசலில் தீப்பந்தங்கள் ஏற்றியும் பொது இடங்களில் பெரிய சுடர்களை ஏற்றியும் நினைவுகூர வேண்டும்.
இந்த சுடரேற்றும் நிகழ்வானது விடுதலைப் பாதைக்கு உறுதியையும் உணர்வையும் கொடுத்து நிற்கின்றது.
மாவீரர் நாள் நவம்பர்-27
இரவு நிகழ்வுகள்”
தேசியத் தலைவரின் மாவீரர் நாள் நினைவுரை!
(மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரை)
நவம்பர்-27 மாலை 6.05 மணிக்கு ஒலி எழுப்பும் நிகழ்வு தொடங்க கூடியதாக தேசியத் தலைவரின் மாவீரர் நாள் நினைவுரை 5.50, மணிக்குப் பின்னர் இடம்பெறும்.
நினைவொலி எழுப்புதல் (6.05 ) மணி!
தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிறைவடைந்தவுடன் உடனடியாக துயிலும் இல்லங்களில் 6.05 மணிக்கு அனைத்து வழிபாட்டு இடங்களிலும், வீடுகளிலும், மணி ஒலி ஒரு மனித்துளி நேரம் எழுப்பப்படும், உயிர்காப்பு பணியில் ஈடுபடும் ஊர்திகள் தவிர ஏனைய அனைத்து ஊர்திகளும் நிகழ்வு தொடங்குவதுக்கு ஏற்ற வகையில் நிறுத்தபட்டு அமைதி பேணப்படல் வேண்டும்.
அகவணக்கம் (6.06 ) மணி!
மாவீரர்களுக்கான நினைவொலி நிறுத்தபட்டவுடன் (6.06 ) மணிக்கு மாவீரர்களுக்கான ஒரு மணித்துளி அகவணக்கம் செலுத்தப்படும். இந்த நேரம் இல்லங்களிலும் ஏனைய இடங்களிலும் இருக்கும் தமிழீழ மக்கள் எழுத்து நின்று, மாவீரர்களை நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்துதல் வேண்டும்.
ஈகை சுடர் ஏற்றுதல் (6.07) மணி!
அகவணக்கம் நிறைவுற்றதும் ( 6.07 ) மணிக்கு ஈகைசுடர் ஏற்றப் படல் வேண்டும் (மாவீரர்களின் பெற்றோர் சுடர் ஏற்ற வேண்டிய கல்லறைகள், நினைவு கற்களுக்கு முன்னால் ( 5.15 ) மணிக்கு நிற்ககூடிய வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ள பட்டிருக்கும்)
மாவீரர் துயிலும் இல்லங்களில் உள்ள மாவீரர்களின் கல்லறைகள், நடுகற்கள் முன், மாவீரர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் அதே நேரம் மாவீரர் துயிலும் இல்லங்களில் இடம்பெயர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கென ஒழுங்கு செய்யபட்ட பிரத்தியோக இடங்களில் ஈகைசுடர் ஏற்றுவார்கள்.
இவை தவிர துயிலும் இல்லங்களுக்கு வர இயலாத பொதுமக்கள் தமது இல்லங்களில், பொது இடங்களில், அலுவலகங்கள், விளையாட்டு இடங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் உரிய நேரத்தில், உரிய முறைப்படி ஈகைசுடர் ஏற்றுவார்கள், ஏற்றும் போது, மாவீரர் பாடல் ஒலிக்கப்படும் (மாவீரர் ஈகைசுடர் ஏற்றப்படும் நேரத்தில் அதன் நோக்கம்,அதன் புனிதம் புரிந்துகொள்ளாது வீதிகளில் ரயர்களை எரிப்பதோ, அல்லது வேறுவகையில் ஒலி, ஒளி, உருவாக்குவதோ தவிர்க்கப்படல் வேண்டும்.
அலங்காரம் (சோடனை)
எமது அமைப்பை சார்ந்த வீரச்சாவு, வீரவணக்க கூட்டம், துயிலும் இல்லம், மாவீரர் விசேட நிகழ்வு, வேறு அனைத்து நிகழ்வுகளுக்கான அலங்காரங்கள், சமுக, சமய, வேறு அரசியல் சார்ந்ததாக இருக்காமல், எமது தேசியம் சார்ந்ததாக, தேசியக் கொடியின் நிறங்களைப் பிரதி பலிப்பதாக அமைதல் வேண்டும்.
எமது அலங்கார முறையும் ,நிறங்களும்!
சிவப்பு, மஞ்சள், கருப்பு -தேசியக் கொடியைப் பிரதிபலிக்கும், கருப்பு நிறம், கரும்புலிகள் நாள், மற்றும் கரும்புலிகள் சம்மந்தமான நிகழ்வுகளுக்கு மட்டும் கலந்து பயன்படுத்தலாம்.
*வீரச்சாவு கால் நாட்டலுக்கு சிவப்பு, மஞ்சள் துணிகளை பாவித்தல் வேண்டும்.
*மேசை விரிப்பு, பீட விரிப்புக்களுக்கும் சிவப்பு, மஞ்சள் நிறங்களால் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். வெள்ளை நிற விரித்தல் பாவிப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.
*இவ் அலங்காரங்கள் தனித்துவமாக, மாவீரர்களின் தற்கொடை தியாகம், அமைப்பு, இலட்சியங்களை மக்கள் மனங்களில் பதிந்து எமது போராட்டத்தின் பால் ஈர்க்கப்பட்டு இணைந்து செயற்பட வழிசமைத்தல் வேண்டும்.
கடைப் பிடிக்க வேண்டிய சில நடைமுறைகள், ஆரம்ப நிகழ்வுகள்!
*1 பொதுச்சுடர்
*2 தேசியக்கொடி ஏற்றல்
*3 ஈகைசுடர்
*4 மலர்வணக்கம்
*5 அகவணக்கம்
*6 உறுதியுரை
*7 நினைவுரை
*8 எமது மாவீரர் நிகழ்வுகள் அனைத்திலும் ஈகைசுடர் ஏற்றுதல் கட்டாயமாகும், மங்கள விளக்கு ஏற்றக் கூடாது, அகவணக்கத்திற்க்கும் நேரம் குறிக்கக் கூடாது.
மாவீரர் நாள் கையேடு
தவிர்க்க வேண்டியவை!
அஞ்சலி, மவுன வணக்கம், மலரஞ்சலி, மங்கள விளக்கு, அஞ்சலிஉரை, அஞ்சலிக் கூட்டம், அகவணக்கம் -ஒருநிமிடம் இரு நிமிடம் என குறித்து குறுதல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
சேர்க்கப்பட வேண்டியவை!
வீரவணக்கம், அகவணக்கம், மலர்வணக்கம், ஈகைசுடர், வீரவணக்க உரை, வீரச்சாவு, வீரச்சாவுக் கூட்டம், வித்துடல் விதைப்பு. போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
முக்கிய விடையம்!
மாலை 6.00, மணிக்குப் பின்னர் எந்த நிகழ்வுகளிலும் தேசியக் கொடி ஏற்றுதல் தவிர்க்கபடல் வேண்டும், மாலை 6.மணிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படட நிகழ்வு இரவு நேரத்திலும் தொடர்ந்து நடைபெறுமானால் நிகழ்வு நிறைவில் தேசியக் கொடி இறக்குதல் வேண்டும், இரவு நேரத்தில் தேசியக் கொடிக்கு படும் வகையில் வெளிச்சம் பாய்ச்சுதல் வேண்டும்.
எக் காரணம் கொண்டும் தேசியக் கொடி கம்பத்துடன் மடித்துக் கட்டுதல் கூடாது, தேசியக் கொடியை மடித்து பீடத்திற்கு அருகில் ஒரு மேசையின் மேல் புனிதமான தட்டில் வைக்க வேண்டும்.
போற்றப்பட வேண்டிய பண்பாடகட்டும்!
எமது தாயகமாம், தமிழீழ நாட்டின் தேசிய நாட்களில், மாவீரர் நாள் மிக முக்கிய நாளாகும், மாவீரர் நாள் என்பது தமிழ் ஈழத்தின் விடிவிற்காகவும், உயர்வுக்காகவும் உழைத்து, உயிரை தற்கொடையாக ஈந்து, இந்த மண்ணிற்கே உரமாகி விட்டவர்களினதும், எமது மூச்சுடன் ஒன்றாகக் கலந்து விட்டவர்களுடைய புனிதமான நினைவு நாளாகும்.
உங்கள் உயிரினும் மேலான குழந்தைகளும், எமது சக போராளிக்களுமான இம் மாவீரர்களின் தியாகம், அவர்களின் உணர்வுகள், இலட்சிய தாகம், கனவுகள் என்பன எம்மால், என்றுமே மறைக்கப்பட முடியாதவையாகும், புனிதத் தன்மை வாய்ந்ததும் ஆகும். காலம், கலாமாக நினைவு கூர்ந்து, என்றும் போற்றப்பட வேண்டிய வீரம் மிகு புனித நாளாகும்.
இம் மாவீரர்களின் நினைவுகள், எம்மை வழிநடத்தும் உந்து சக்தியாக என்றும் எம்முடன் கூடவே இருக்கும், மாவீர்களின் இத்தகைய நினைவு கூரல் என்பது ஒரு நிகழ்வாக மட்டும் இருந்து விடாது, எமது மக்களின் வரலாற்று சுவடியகவும், பண்பாட்டுக்கு உரியவையாகவும் வளர்ந்து நிற்கும்.
எமக்குரிய இந்த உயரிய நிகழ்வை தத்துவார்த்தமாகவும், உணர்வு பூர்வமாகவும் நிலை நாட்டுவதற்காக எமது மக்கள் அனைவரினதும் மனமுவந்த, ஒருங்கிணைந்த பங்களிப்புக்களின் ஊடாக, எழுச்சி கொள்ளும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வேண்டி நிற்கிறோம்.
புலிகளின் தாகம் தமிழ்ழீழ தாயகம்
நன்றி!
பணி முதல்வர்,
தமிழீழ மாவீரர் பணிமனை,
அரசியல்துறை,
தமிழீழ விடுதலை புலிகள்,
தமிழீழம்.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-46133198411696497792010-11-02T22:17:00.000-07:002010-11-02T22:49:08.281-07:00ஈழகானங்களின் வரிகள்<a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_2374.html">1)தீயினில் எரியாத தீபங்களே </a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_2878.html">2)டப்பாங்கூத்துப் பாட்டுத்தான்</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_1175.html">3)ஆண்டாண்டு காலமதாய் நாம்</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_2764.html">4)ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_4865.html">5)ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் </a><br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_1379.html">6)ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_3938.html">7)இங்கு வந்து பிறந்த பின்பே</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_9642.html">8)மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_856.html">9)என் இனமே... என் சனமே... </a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_5242.html">10)காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம் </a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_6060.html">11)குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா </a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_3498.html">12)தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_115.html">13)விழியில் சொரியும் அருவிகள்</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_70.html">14)போரம்மா உனையன்றி யாரம்மா </a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_2125.html">15)அடைக்கலம் தந்த வீடுகளே</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_7041.html">16)நல்லூரின் வீதியில் நடந்தது யாகம் </a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_2239.html">17)சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு </a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_8712.html">18)ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் </a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_1971.html">19)கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள...</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_3427.html">20)நெஞ்சிலே ரத்தம் கொட்டும் நினைவே </a><br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_7764.html">21)தளராத துணிவோடு களமாடினாய்</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_316.html">22)எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகர...</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_4371.html">23)கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_9761.html">24)ஆழக்கடலெங்கும் சோழமகராஜன்</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_8150.html">25)பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_3569.html">26)உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் </a> <br /><a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_1774.html">27)தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_9205.html">28)விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறு... </a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_3958.html">29)என்னடா தம்பி கதைக்கிறானுகள் சந்திவெளியில </a> <br /><a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_1073.html">30)மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன...</a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post_02.html">31)வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது </a> <br /> <a href="http://thaimady.blogspot.com/2010/11/blog-post.html">32)நடந்து வந்த பாதைதன்னை திரும்பிப் பாரடா</a><strong></strong><br /><br />BY: கபிலன் thaimady@gmial.com.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-36503531110396998532010-11-02T21:53:00.002-07:002010-11-02T21:58:42.115-07:00தீயினில் எரியாத தீபங்களேதீயினில் எரியாத தீபங்களே - நம்<br />தேசத்தில் உருவான ராகங்களே<br />தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர்<br />தரணியில் காவிய வடிவெடுத்தீர்<br /><br />மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே<br /><br />தாய் தந்தை அன்பினைத் துறந்தீரே<br />தமிழ் அடிமை விலங்கினை உடைப்பதற்கே<br />தங்கை தம்பி பாசத்தை மறந்தீரே<br />புது சாதனை ஈழத்தில் படைப்பதற்கே<br /><br />மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!<br /><br />பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப்<br />பாதகர் உயிர்களை முடித்தீரே<br />இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள்<br />இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே<br /><br />மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே!<br /><br />இரவு வந்தால் ஒரு பகலும் வரும் - உங்கள்<br />இலட்சியக் கனவுக்கும் விடிவு வரும்<br />விரைவினிலே நமக்கொரு வழி பிறக்கும்<br />ஈழ வீதியிலே புலிக்கொடி தினம் பறக்கும்.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-88397455907691790782010-11-02T21:53:00.001-07:002010-11-02T21:53:39.415-07:00டப்பாங்கூத்துப் பாட்டுத்தான்டப்பாங்கூத்துப் பாட்டுத்தான்<br />காதில கொஞ்சம் போட்டுப்பாரு -இது<br />டப்பாங்கூத்துப் பாட்டுத்தான்<br />காதில கொஞ்சம் போட்டுப்பாரு<br />குட்டிக்கண்ணன் றோட்டில<br />வந்து நிண்டு பாட்டில <br />நாட்டுக்காக செய்தியொன்று<br />சொல்லிறன் தெருக்கூத்தில <br /><br />நாடும் வீடும் எங்களுக்கு ரெண்டு கண்ணுதானே -நாம்<br />சொந்தமென்று சொல்ல இந்த மண்ணும் ஒன்றுதானே<br />மானத்துக்குப் பேரெடுத்த நாங்கள் கவரிமானே <br />இதுபுரிஞ்சா இது தெரிஞ்சா புலிநடையப் போடு<br /><br /><br />அக்கா என்ன வெக்கத்தில தரையப் பாக்கிறீங்க<br />அண்ணே என்ன வளைஞ்சு குனிஞ்சு தலையச் சொறியிறீங்க<br />காலம் உங்களை நம்பித்தானே காத்திருக்குதிங்க <br />இது புரிஞ்சா இது தெரிஞ்சா புலி நடையப் போடு<br /><br /><br />நாங்கள் வாழவேண்டுமென்றால் நாடுமீள வேண்டும் -எங்கள்<br />நாடுமீள வேண்டுமென்றால் வேங்கையாக வேண்டும்<br />அண்ணன் பேரைச் சொல்லிப்பாரு உன்னில் வீரம் ஏறும் <br />இதுபுரிஞ்சா இது தெரிஞ்சா புலி நடையப்போடு <br /><br />ஒரு கிளி தூங்குதம்மா<br />மறுகிளி வேகுதம்மா<br />வேதனை யாரறிவார்<br />விடியும் ஓர் நாள்<br /><br />உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து<br />பகைவனை எரி எரி<br />தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு<br />புதுயுகம் இனி இனி<br /><br />ஒரு கிளி தூங்குதம்மா<br />மறுகிளி வேகுதம்மா<br />வேதனை யாரறிவார்<br />விடியும் ஓர் நாளிலே<br /><br />மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே<br />பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா<br />ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து<br />சபதம் முடி முடி<br />ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து<br />சபதம் முடி முடி<br /><br />உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து<br />பகைவனை எரி எரி<br />உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து<br />பகைவனை எரி எரி<br /><br />ஒவ்வொரு இரவும் இங்கே விடியும்<br />அவன் வீரம் சொல்லி நாள்தோறுமே<br />ஒவ்வொரு பூவும் இங்கே மலரும்<br />அவன் பேரைச் சொல்லி தினந்தோறுமே<br />இனித் தோன்றுகின்ற மாவீரர் எல்லாம்<br />அவன் பாதையில் பெண்ணே..!<br />சுடர் தீபம் ஏற்றிடு<br /><br />ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து<br />சபதம் முடி முடி<br />ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து<br />சபதம் முடி முடி<br />இனித் தோன்றுகின்ற மாவீரர் எல்லாம்<br />அவன் பாதையில் பெண்ணே..!<br />சுடர் தீபம் ஏற்றிடு<br /><br />ஒரு கிளி தூங்குதம்மா<br />மறுகிளி வேகுதம்மா<br />வேதனை யாரறிவார்<br />விடியும் ஓர் நாளிலே<br /><br />மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே<br />பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா<br /><br />உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து<br />பகைவனை எரி எரி<br />தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு<br />புதுயுகம் இனி இனி<br /><br />பயந்தவர் பார்வையிலே பெண்ணே<br />சின்னப் பனித்துளியும் கடலளவு<br />துணிந்தவர் மனதில் பெண்ணே<br />பெரும் அலைகடலும் துளியளவு<br />அந்த சூரியனும் வாழ்வில் தூரமில்லை<br />புதுதேசமது மலர்ந்தால் விழிநீரை மாற்றிடு<br /><br />உனக்குள்ளே இருக்கிற எரிமலையெடுத்து<br />பகைவனை எரி எரி<br />தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு<br />புதுயுகம் இனி இனி<br /><br />அந்த சூரியனும் வாழ்வில் தூரமில்லை<br />புதுதேசமது மலர்ந்தால் விழிநீரை மாற்றிடு<br /><br />ஒரு கிளி தூங்குதம்மா<br />மறுகிளி வேகுதம்மா<br />வேதனை யாரறிவார்<br />விடியும் ஓர் நாளிலே<br /><br />மன்னன் மனதின் எண்ணம் நிறைவேறவே<br />பெண்ணே..! பெண்ணே..! கடமை முடிப்பாயடா<br />ஆயிரம் ஆயிரம் தடைகளை உடைத்து<br />சபதம் முடி முடி<br /><br />தயக்கமும் கலக்கமும் வருத்தமும் எதற்கு<br />புதுயுகம் இனி இனி<br /><br />ஒரு கிளி தூங்குதம்மா<br />மறுகிளி வேகுதம்மா<br />வேதனை யாரறிவார்<br />விடியும் ஓர் நாளிலே.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-72709121870538939702010-11-02T21:52:00.003-07:002010-11-02T21:52:58.963-07:00ஆண்டாண்டு காலமதாய் நாம்ஆண்டாண்டு காலமதாய் நாம்<br />ஆண்டு வந்த பூமி<br />அப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி<br />சுத்தி வந்த வீதி<br />எங்கள் அக்கா அண்ணையரே<br />எதிரி இங்கு வரலாமா<br />எங்கள் மண்ணை ஆள நினைச்சா<br />வேங்கை நாங்க விடலாமா<br /><br /><br />வீட்டுக்கொரு வீரன் போனா<br />விடுதலையும் நாளை வரும்<br />வீதியிலே சுத்தித் திரிஞ்சா<br />அடிமையாகச் சாக வரும்<br />ஆட்டம் போடும் ராணுவங்கள்<br />அலறி ஓடணும் . நாம்<br />அடிமை இல்லை என்று புதிய<br />பரணி பாடணும்<br /><br /><br />எங்கள் வேங்கைத் தலைவன் தானே<br />எங்களுக்கு வழிகாட்டி<br />எதிரிகளின் பாசறை யாவும்<br />எரித்திடுவோம் தீ மூட்டி<br />பொங்கி எழு புயலாக போர்க்களத்தில் விளையாடு<br />புனையட்டும் தமிழீழம் புதிய வீர வரலாறு<br /><br /><br />என்னினமே என் சனமே<br />இன்னும் என்ன மயக்கமா<br />எதிரிகளின் பாசறை யாவும்<br />எரித்திடவே தயக்கமா<br />பண்டாரவன்னியனின் வாரிசல்லவா - பகையை<br />பந்தாடி வென்றிடவே ஆசையில்லையா?ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-48283346871385921822010-11-02T21:52:00.001-07:002010-11-02T21:52:26.534-07:00ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்<br />ஒரு பெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்<br />வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்<br />வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்.<br /><br />சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய<br />சந்தன மேனிகளே!<br />உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்<br />ஆரை நினைத்தீரோ!<br />நீங்கள் யாரை நினைத்தீரோ..!<br /><br />வாசலில் காற்றென வீசுங்கள்<br />உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.<br /><br />சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய<br />சந்தன மேனிகளே!<br />உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்<br />ஆரை நினைத்தீரோ!<br />நீங்கள் யாரை நினைத்தீரோ..!<br /><br />வென்றிடவே கரும் வேங்கைகளாகிய<br />வீரக் கொழுந்துகளே!<br />உம்மைக் கொன்றவர் மீதினில் குண்டெனப் பாய்கையில்<br />என்ன நினைத்தீரோ!<br /><br />வாசலில் காற்றென வீசுங்கள்<br />உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.<br /><br />சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய<br />சந்தன மேனிகளே!<br />உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்<br />ஆரை நினைத்தீரோ!<br />நீங்கள் யாரை நினைத்தீரோ..!<br /><br />தாயகத் தாகங்கள் தாங்கிய நெஞ்சினில்<br />சாவைச் சுமந்தவரே!<br />உங்கள் தேகங்கள் தீயினில் வேகின்ற நேரத்தில்<br />ஆரை நினைத்தீரோ!<br /><br />வாசலில் காற்றென வீசுங்கள்<br />உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.<br /><br />சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய<br />சந்தன மேனிகளே!<br />உங்கள் ஆவி கலங்கிய<br />அக்கணப் போதினில்<br />ஆரை நினைத்தீரோ!<br />நீங்கள் யாரை நினைத்தீரோ..!<br /><br />தாலாட்டுப் பாடியே தன் முலையூட்டிய<br />தாயை நினைத்தீரோ!<br />உங்கள் காலாற தோள் மீது தாங்கிய தந்தையின்<br />கையை நினைத்தீரோ!<br /><br />வாசலில் காற்றென வீசுங்கள்<br />உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.<br /><br />சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய<br />சந்தன மேனிகளே!<br />உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்<br />ஆரை நினைத்தீரோ!<br />நீங்கள் யாரை நினைத்தீரோ..! <br /><br />நாளும் விடுதலைத் தீயில் குளித்திடும்<br />நாயகனை நினைத்தீரோ!<br />உங்கள் தோளைத் தடவியே சென்றிடு என்றவன்<br />சோகம்தனை நினைத்தீரோ!<br /><br />வாசலில் காற்றென வீசுங்கள்<br />உங்கள் வாய் திறந்தோர் வார்த்தை பேசுங்கள்.<br /><br />சாவினைத் தோள்மீது தாங்கிய காவிய<br />சந்தன மேனிகளே!<br />உங்கள் ஆவி கலங்கிய அக்கணப் போதினில்<br />ஆரை நினைத்தீரோ!<br />நீங்கள் யாரை நினைத்தீரோ..!ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-82784489995308758322010-11-02T21:51:00.001-07:002010-11-02T21:51:55.198-07:00ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் <br />அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்<br />பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும் <br />தந்தானானே தாரேனானா தானா ஏய்<br />தந்தானானே தாரேனானா தானா....<br /><br />ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் <br />அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்<br />பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br /><br />கரும்புலி இதயம் இரும்பென எழுதும்<br />கவிதைகள் பொய் ஆகும்<br />அது இரும்பினிலில்லை அரும்பிய <br />முல்லை என்பதே மெய் ஆகும்<br /><br />ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் <br />அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்<br />பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br /><br />சாவை தன் வாசலில் சந்திக்கும் போதிலே <br />யாருக்குமே உடல் வேர்க்கும் அந்த தேவ பிறவிகள் <br />சாவை தொடுகையில் சாவுக்குத்தானெடா வேர்க்கும் <br />வளர்த்த கோழி உரித்திடாத வாழ்வை எடுத்தவர் <br />அவர் படுக்கும் பாயில் வளர்க்கும் நாயை கிடக்க விடுபவர் <br /><br />ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் <br />அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்<br />பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்க யாரால் அளக்க முடியும்<br /><br />காங்கை நெருப்புக்கள் தூங்குவதே இல்லை<br />யாருக்கு இங்கே இது தெரியும்<br />கரும் வேங்கைகள் தாகங்கள் ஏதென<br />தாங்கிடும் வேர்களுக்கே இது புரியும்<br />இலக்கை நோக்கி நகரும் போதும் கணக்கை பார்ப்பவர் <br />அவர் வெடிக்கும் போதும் அனுப்பும் தோழர் உறவை காப்பர்<br /><br /><br />ஆகாயத்தை நூலால் அளக்க முடியும் <br />அந்த ஆழக்கடலை காலால் அளக்க முடியும்<br />பூலோகத்தை புதிதாய் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்<br />கரும்புலிகளை இங்கு யாரால் அளக்க முடியும்.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-5565333386747357572010-11-02T21:50:00.002-07:002010-11-02T21:51:12.813-07:00ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம்ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம் <br />எங்கள் தமிழ் ஈழம்<br />அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்<br />ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம் <br />எங்கள் தமிழ் ஈழம்<br />அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்<br /><br />அடி கொள வேண்டிய சந்தண மாந்தர்கள் விதையாயே புதைந்தாரே<br />விடியலுக்காகவே உணர்வோடுயிர்களை தேசத்துக்கு ஈந்தாரே<br /><br />இன்னும் இவர் நெஞ்சால் எங்களது மண்ணைத் தாங்கியே உறங்குகிறார் <br />தாங்கியே உறங்குகிறார்<br />கண்ணிரண்டும் கரைந்து மலர் தீபம் ஏற்றி ஆண்டுதோறும் வணங்குகிறார் <br />ஆண்டுதோறும் வணங்குகிறார்<br />மண்ணில் இவர் சிந்திய குருதியால் நாடே சிவந்து கிடக்கிறது <br />சிவந்து கிடக்கிறது<br />இவர் கண்ணுறங்கும் கல்லறையில் தமிழ் ஈழம் எனும் ஒலி இசைந்து கேட்கிறது <br />இசைந்து கேட்கிறது <br /><br />ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம் <br />எங்கள் தமிழ் ஈழம்<br />அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்<br /><br />எங்களோடு நேற்று உண்டு பேசி மகிழ்ந்து வீதி உலா வந்தவர்கள் <br />வீதி உலா வந்தவர்கள் <br />எங்கள் சங்கத் தமிழ்ஈழ தேசியத் தலைவன் நீதி வழி நடந்தவர்கள் <br />நீதி வழி நடந்தவர்கள்<br />சங்ககாலம் படைத்த புறங்களை மீண்டும் புதுப்பித்துப் போனாரே <br />புதுப்பித்துப் போனாரே <br />மக்காள் உங்கள் கால் பாதம் உறைவிடம் தன்னில் மிதியாமல் பதிப்பீரே <br />மிதியாமல் பதிப்பீரே<br /><br />ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம் <br />எங்கள் தமிழ் ஈழம்<br />அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்<br /><br />மாலை சர்ப்பம் அணிந்த விசம் உண்ட கண்டனையும் வென்றுதான் நின்றார்கள் வென்றுதான் நின்றார்கள்<br />பெரும் குலையாத மலை போல் அழியாத சரிதமாய் ஞாலமதில் நிலைப்பார்கள் <br />ஞாலமதில் நிலைப்பார்கள்<br />அலைகடல் வானும் நதிக்கரை காற்றும் இவர்களை பறைசாற்றும் <br />இவர்களை பறைசாற்றும் <br />பூஞ்சோலை மாடம் சாலை சந்தி எல்லாமே இவர்களின் பேர் விளங்கும் <br />இவர்களின் பேர் விளங்கும்<br /><br />ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம் <br />எங்கள் தமிழ் ஈழம்<br />அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்<br /><br />ஓரடி மண்ணால் உயர்ந்து நிற்குது எங்கள் தமிழ் ஈழம் <br />எங்கள் தமிழ் ஈழம்<br />அது போராடி மடிந்த மாவீரர்களின் பெரும் தியாகம்<br /><br />அடி கொள வேண்டிய சந்தண மாந்தர்கள் விதையாயே புதைந்தாரே<br />விடியலுக்காகவே உணர்வோடுயிர்களை தேசத்துக்கு ஈந்தாரே.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-53026441660455874252010-11-02T21:50:00.001-07:002010-11-02T21:50:23.484-07:00இங்கு வந்து பிறந்த பின்பேஇங்கு வந்து பிறந்த பின்பே<br />இருந்த இடம் தெரியும்<br />நாளை சென்று வீழும்<br />சேதி சொல்ல<br />இங்கெவரால் முடியும்<br />வாழ்க்கை என்னும் பயணம்<br />இதை மாற்றிடவா முடியும்<br /><br />இங்கு வந்து பிறந்த பின்பே<br />இருந்த இடம் தெரியும்<br /><br />பூமியிலே சாகும் தேதி<br />யாருக்கிங்கு தெரியும்<br />கரும்புலிளுக்கு மட்டும் தானே<br />போகும் தேதி புரியும்<br />சாமிகளும் வாழ்த்தி வீழும்<br />சரித்திரங்கள் இவர்கள்<br />தமிழ் சந்ததியில் அழியாத<br />சத்தியத்தின் சுவர்கள்<br />சத்தியத்தின் சுவர்கள்<br /><br />இங்கு வந்து பிறந்த பின்பே<br />இருந்த இடம் தெரியும்<br /><br />வாழ்வினிலே வசந்த காலம்<br />துறந்தவர்கள் சிலரே<br />--ம் வாசலிலே இளமை ராகம்<br />மறந்தவர்கள் சிலரே<br />கரும்புலிகள் விரும்பி இங்கு<br />இருப்பிழந்து போவார்<br />எங்கள் கண்ணெதிரே நின்ற பின்னர்<br />உருக்குலைந்து போவார்<br />உருக்குலைந்து போவார்<br /><br />இங்கு வந்து பிறந்த பின்பே<br />இருந்த இடம் தெரியும்<br /><br />தோளில் ஏற்றிப் போவதற்கு<br />நாலு பேர்கள் வேண்டும்<br />இந்த தோள்கள் இன்றி கரும்புலியை<br />தீயின் வாய்கள் தீண்டும்<br />வாழும் காலம் நீள்வதிலே<br />வந்திடுமா பெருமை<br />இல்லை வாய்கள் நூறு போற்றிப் பாட<br />சாவதுதான் பெருமை<br />சாவதுதான் பெருமை<br /><br />இங்கு வந்து பிறந்த பின்பே<br />இருந்த இடம் தெரியும்<br /><br />அச்சமின்றி குண்டடைத்து<br />ஆடிப்பாடிப் போவார்<br />எங்கள் அண்ணன் பெயர் <br />சொல்லிச் சொல்லி<br />கரும்புலிகள் சாவார்<br />சக்கை வண்டி தன்னில் ஏறி<br />சரித்திரங்கள் போவார்<br />வரும் சந்ததியின் வாழ்வுக்காக<br />தங்கள் உயிர் ஈவார்<br />தங்கள் உயிர் ஈவார்<br /><br />இங்கு வந்து பிறந்த பின்பே<br />இருந்த இடம் தெரியும்<br /><br /><br />நாளை சென்றுவீழும் சேதி சொல்ல<br />இங்கெவரால் முடியும்<br />வாழ்க்கை என்னும் பயணம்<br />இதை மாற்றிடவா முடியும்<br />வாழ்க்கை என்னும் பயணம்<br />இதை மாற்றிடவா முடியும்.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-46611321415423998412010-11-02T21:49:00.001-07:002010-11-02T21:49:47.427-07:00மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்<br />பகைவீடு துயில்கின்ற விடிசாம நேரம்<br />புயலாகி தமிழீழப் புலியாகிச் சென்றீர்<br />பூநகரில் நிலையான பகையாவும் வென்றீர்<br /><br />வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்<br />விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்<br />பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்<br />பூநகரி நாயகராய் நீர் விளங்குகின்றீர்<br /><br /><br />வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்<br />விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்<br /><br />வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை<br />வாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்<br />வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை<br />வாசலிலே நீர் புகுந்து பேயை ஓட்டினீர்<br />விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது -உங்கள்<br />வீரமதை கண்டுபகை பயந்தொளித்தது<br /><br />வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்<br />விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்<br /><br />நாகதேவன் துறையினிலே காற்றாகினீர் -அந்த<br />ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்<br />நாகதேவன் துறையினிலே காற்றாகினீர் -அந்த<br />ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்<br />வேவுப்படை வீரரென நீங்கள் புகுந்தீர் -பெற்ற<br />வெற்றிகளின் வேர்களிலே நீங்கள் விழுந்தீர்<br /><br /><br />வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்<br />விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்<br /><br />நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்<br />நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்<br />நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்<br />நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்<br />பஞ்சு நெருப்பாகி வரும் பகையை முடிப்போம் -பிர<br />பாகரனின் காலத்திலே ஈழம் எடுப்போம்<br /><br />வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்<br />விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்<br />பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்<br />பூநகரி நாயகராய் நீர் விளங்குகின்றீர்<br /><br /><br />வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்<br />விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-14607799076793005042010-11-02T21:48:00.001-07:002010-11-02T21:48:56.974-07:00என் இனமே... என் சனமே...என் இனமே... என் சனமே...<br />என்னை உனக்குத் தெரிகிறதா<br />எனது குரல் புரிகிறதா<br /><br />என் இனமே... என் சனமே...<br /><br />மண்ணை இன்னும் நேசிப்பவன்<br />அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்<br /><br />என் இனமே என் சனமே<br />என்னை உனக்குத் தெரிகின்றதா<br />எனது குரல் புரிகிறதா<br /><br />என் இனமே... என் சனமே...<br /><br />அன்னை தந்தை எனக்குமுண்டு<br />அன்பு செய்ய உறவும் உண்டு<br />என்னை நம்பி உயிர்கள் உண்டு<br />ஏக்கம் நெஞ்சில் நிறைய உண்டு<br /><br />என் இனமே என் சனமே<br />என்னை உனக்குத் தெரிகின்றதா<br />எனது குரல் புரிகிறதா<br />மண்ணை இன்னும் நேசிப்பவன்<br />அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்<br /><br />என் இனமே... என் சனமே...<br /><br />பாசறை நான் புகுந்த இடம்<br />பதுங்கு குழி உறங்குமிடம்<br />தேசநலன் எனது கடன்<br />தேன்தமிழே எனது திடல்<br /><br />மண்ணை இன்னும் நேசிப்பவன்<br />அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்<br /><br />என் இனமே என் சனமே<br />என்னை உனக்குத் தெரிகின்றதா<br />எனது குரல் புரிகிறதா<br />அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்<br />அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்<br /><br />என் இனமே... என் சனமே...<br /><br />என் முடிவில் விடிவிருக்கும்<br />எதிரிகளின் அழிவிருக்கும்<br />சந்ததிகள் சிரித்து நிற்க<br />சரித்திரத்தில் நிறைந்திருப்பேன்<br /><br />அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்<br />அதற்காய் மரணத்தையே வாசிப்பவன்<br /><br />என் இனமே என் சனமே<br />என்னை உனக்குத் தெரிகின்றதா<br />எனது குரல் புரிகிறதா<br />அதனால் மண்ணை இன்னும் நேசிப்பவன்<br />அதற்காய் மரணத்தையே யாசிப்பவன்<br /><br />என் இனமே...! என் சனமே...ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-53951667164004588402010-11-02T21:47:00.000-07:002010-11-02T21:48:12.879-07:00காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்காற்றாகி வந்தோம் கடலாகி வந்தோம்<br />காதோரம் ஒரு சேதி சொல்வோம்<br />காதோரம் ஒரு சேதி சொல்வோம்<br />கரும்புலியாகி நின்றோம் புயலாகி வென்றோம்<br />புரியாத புதிராகச் சென்றோம்<br />புரியாத புதிராகச் சென்றோம்<br /><br />எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி<br />இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது<br />கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் -எங்கள்<br />காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்<br /><br />எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி<br />இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது<br />எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது<br /><br /><br />வாழும்போது மானத்தோடு<br />வாழ்பவன்தானே தமிழன் -தன்<br />வாசலில் அடிமை சேகவம் செய்து<br />வாழ்பவன் என்ன மனிதன்<br />வாழும்போது மானத்தோடு<br />வாழ்பவன்தானே தமிழன் -தன்<br />வாசலில் அடிமை சேகவம் செய்து<br />வாழ்பவன் என்ன மனிதன்<br />வழியில் இடறும் பகைகள் எரிய<br />வருக வருக தமிழா<br />வழியில் இடறும் பகைகள் எரிய<br />வருக வருக தமிழா<br />உன் விழியில் வழியும் நீரைத் துடைத்து<br />வெளியில் வருக தமிழா<br /><br /><br />எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி<br />இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது<br />எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது<br /><br />காற்றும் நிலவும் யாருக்கெனினும்<br />கைகள் கட்டுவதில்லை - நாங்கள்<br />போகும் திசையில் சாகும்வரையில்<br />புலிகள் பணிவதுமில்லை<br />காற்றும் நிலவும் யாருக்கெனினும்<br />கைகள் கட்டுவதில்லை - நாங்கள்<br />போகும் திசையில் சாகும்வரையில்<br />புலிகள் பணிவதுமில்லை<br />மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்<br />முளைப்போம் இந்த மண்ணில்<br />மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள்<br />முளைப்போம் இந்த மண்ணில்<br />எங்கள் மூச்சும் இந்த காற்றில் கலந்து<br />மூட்டும் தீயைக் கண்ணில்<br /><br />எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி<br />இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது<br />கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள்<br />கண்ணில் வழியும் நீரைத் துடைத்தே வாருங்கள் <br />எங்கள்<br />காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்<br />எங்கள்<br />காவிய நாயகன் பாதையிலே அணி சேருங்கள்<br /><br />எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது - இனி<br />இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-85998368563632594062010-11-02T21:46:00.002-07:002010-11-02T21:47:23.913-07:00குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்காகுக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ<br />கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா<br /><br />இது வேங்கைகள் வாழும் நாடு - அவர்<br />வீரத்தையே தினம் பாடு<br /><br />குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ<br />கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா<br /><br />அஞ்சல் அகற்றிட நஞ்சினை ஏந்தி<br />வெஞ்சமர் ஆடிடும் பிள்ளை - அவர்<br />வீரத்துக்கே இணையில்லை - இதை<br />நெஞ்சில் நினைந்து அஞ்சல் அகற்றி<br />கொஞ்சும் குரல்தனில் பாடக்கா<br /><br />குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ<br />கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா<br /><br />இந்தியம் வந்திங்கு வஞ்சனை செய்தது<br />எங்கள் புலி பயந்தாரா - கொண்ட<br />இலட்சியத்தை மறந்தாரா - அவர்<br />சத்தியம் காக்க யுத்தம் புரிந்த<br />சங்கதியைத் தினம் பாடக்கா<br /><br />குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ<br />கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா<br /><br />காலைப் பொழுதினில் சோலை நடுவினில்<br />கானம் இசைத்திடும் குயிலக்கா - சுப<br />இராகம் இனிக்கும் உன் குரலக்கா<br />நாளை நமக்கொரு ஈழம் மலர்ந்திடும்<br />நாலு திசை எட்டப் பாடக்கா<br /><br />குக்கூக் குக்கூக் குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா - நீ<br />கூவுற பாட்டிலே வீரம் இருக்கணும் சொல்வேன் கேளக்கா.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-23666562986551892482010-11-02T21:46:00.001-07:002010-11-02T21:46:32.454-07:00தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும் <br />என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும் <br />கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் அவள் <br />கையில் கூட ஆயுதங்கள் ஏறும் <br />தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும் <br />என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும் <br />நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை <br />நான் நீண்டநேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை <br /><br />ஊர் முழுதும் ஓலம் நான் உறங்கி வெகு காலம்<br />உறங்கி வெகு காலம் நீ ஓடி வந்தால் போதும் <br /><br />தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும் <br />என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும் <br />காவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில் ..ஒரு காதல் என்ன மாலை என்ன இந்த <br />வேளையில்<br />எங்கள் புலி வீரர் அவர் இருக்கும் இடம் போறேன் <br />இருக்கும் இடம் போறேன் தமிழீழம் வந்தால் வாறேன்<br />தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும் <br />என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும் <br />தென்றல் வந்து தொட்டுஎன்னைகேலி செய்த்து <br />நீ செனற இடம் சொன்ன பின்பு வேலி போட்டது <br /><br />காலம் வந்து சேரும் புலி களத்தில் வாகை சூடும்<br />களத்தில் வாகை சூடும் என் கழுத்தில் மாலை ஆடும்<br />தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும் <br />என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும் <br />தங்க மேனி நொந்து ஈழத்தாய் அழுகின்றாள் <br />என்தலைவன் இந்த நிலையை பார்த்துத்தான் உருகின்றான். <br />எங்கள் மேனி சாகும் இல்லை எதிரி ஆவி போகும்<br />எதிரி ஆவி போகும் தமிழ் ஈழம் வந்து சேரும்<br />தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும் <br />என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும் <br /><br />உன்னை நெஞ்சில் தூங்க வைத்துப்பாட்டு பாடுவேன் எம் உரிமைக்காக நானும் வந்து <br />படையில் சேருவேன் <br />வேங்கை தோற்பதில்லை நம்வீரர் சாவதில்லை வீரர் சாவதில்லை எம் விடிவு தூரம் <br />இல்லை<br />தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும் <br />என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-17319118753349847712010-11-02T21:45:00.001-07:002010-11-02T21:45:46.869-07:00விழியில் சொரியும் அருவிகள்விழியில் சொரியும் அருவிகள் -எமை<br />விட்டுப்பிரிந்தனர் குருவிகள்<br />பகைவன் கப்பலை முடித்தனர் -திரு<br />மலையில் வெடியாய் வெடித்தனர்.<br />தம்பி கதிரவன் எங்கே<br />தணிகை மாறனும் எங்கே<br />மதுசாவும் எங்கே<br />தங்கை சாந்தா நீ எங்கே<br /><br />தாயின் மடியினில் அங்கே -கடல்<br />தாயின் மடியினில் அங்கே<br /><br />பாயும் கடற்புலியாகி வெடியுடன்<br />ஏறி நடந்தவரே -உங்கள்<br />ஆவியுடன் உடல் யாவும் விடுதலைக்காக<br />கொடுத்தவரே<br />தமிழ் ஈழம் உமை மறக்காது<br />பகை கோண மலையிருக்காது<br /><br />வேகமுடன் பெருங்கோபமுடன் பகை<br />வீழும் வெடியெனவானீர்<br />பிரபாகரன் எனும் தீயின் விழிகளும்<br />ஈரம் கசிந்திடப் போனீர்<br />விண்ணும் இடிந்து சொரிந்தது -வெடி<br />வேகத்தில் கப்பல் விரிந்தது<br /><br />நீரின் அடியினில் நீந்தி பகைவரை<br />தீயில் எரித்துவிட்டீரே -அவன்<br />ஏவும் கப்பல்கள் ஏறி வெடித்துமே<br />ஈழம் மலர வைத்தீரே<br />வாயில் சோகத்தின் ராகங்கள் -எங்க.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-70163548897602540102010-11-02T21:44:00.000-07:002010-11-02T21:45:06.919-07:00போரம்மா உனையன்றி யாரம்மாபோரம்மா <br />உனையன்றி யாரம்மா <br />போரம்மா <br />உனையன்றி யாரம்மா <br />போரம்மா <br />உனையன்றி யாரம்மா <br /><br />செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்<br />தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்<br />ஓடிவிடச்செய்வோம் ஓடிவிடச்செய்வோம்<br />அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்<br />அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்<br />அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்<br />இங்கு தமிழ்ஈழமது பொங்கிவர வெல்வோம்<br /><br />அண்ணன் பிரபாகரனின் கண்ணில் எழும்பொறிகள்<br />ஆணையிடும் போதினிலே ஆடும் கரும்புலிகள்<br />ஆடும் கரும்புலிகள் ஆடும் கரும்புலிகள்<br />வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்<br />வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்<br />வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்<br />எங்களுயிர் தந்தெமது எதிரிகளைக் கொல்வோம்<br /><br />மின்னல் தன்னைக் கண்ணில் கொண்டு<br />வீசும் காற்றின் வேகம் கொண்டு<br />மண்ணில் வந்த வேங்கையம்மா போரம்மா<br />மண்ணில் வந்த வேங்கையம்மா -நாங்கள்<br />மண்ணில் வந்த வேங்கையம்மா<br /><br />அண்ணன்சொன்ன வேதம் கேட்டு<br />விண்ணைக்கூட மண்ணில் வீழ்த்தி<br />ஆடும் கரும்புலிகளம்மா போரம்மா<br />ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்<br />ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்<br />ஆடும் கரும்புலிகளம்மா.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-1219672109462929812010-11-02T21:43:00.000-07:002010-11-02T21:44:18.264-07:00அடைக்கலம் தந்த வீடுகளேஅடைக்கலம் தந்த வீடுகளே<br />போய் வருகின்றோம் நன்றி -நெஞ்சை<br />அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் -உங்கள்<br />அன்புக்கு புலிகள் நன்றி<br /><br />நாங்கள் தேடப்படும் காலத்தில் நீங்கள்<br />கதவு திறந்தீர்களே -எம்மை<br />தாங்கினால் வரும் ஆபத்தை எண்ணி<br />பார்க்க மறந்தீர்களே<br />பார்க்க மறந்தீர்களே...பார்க்க மறந்தீர்களே..<br /><br />எங்கள் உடல்களில் ஓம் செங்குருதி<br />உங்கள் சோறல்லவா உங்கள் சோறல்லவா -நாங்கள்<br />தங்கியிருந்த நாள் சிலநாள் என்றாலும்<br />நினைவு நூறல்லவா<br />நினைவு நூறல்லவா...நினைவு நூறல்லவா...<br /><br />பெற்றோரை உறவை பிரிந்திருந்தோம் -அந்த<br />இடைத்தை நிறைத்தீர்களே -மாற்றான்<br />முற்றுகை நடுவில் மூடியெமையுங்கள்<br />சிறகால் மறைத்தீர்களே<br />சிறகால் மறைத்தீர்களே...சிறகால் மறைத்தீர்களே.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-22482472462390466402010-11-02T21:42:00.000-07:002010-11-02T21:43:14.282-07:00நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்நல்லூரின் வீதியில் நடந்தது யாகம் <br />நாலுநாள் ஆனதும் சுருண்டது தேகம் <br />தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை <br />திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை <br /><br />பாடும்பறைவகள் வாருங்கள் <br />புலி வீரன் திலீபனைப் பாடுங்கள் <br />யாகத்தில் ஆகுதி ஆனவன் நாமத்தை <br />ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் <br />காலங்கள் பாடுங்கள் <br />(பாடும்பறைவகள்…………………….. <br /><br />இந்திய ஆதிக்க ராணுவம் வந்தது <br />நீதிக்கு சோதனை தந்தது <br />நாங்கள் சிந்திய ரத்தங்கள் <br />காய்ந்திடும் முன்னரே கால்களில் <br />வீழ் எனச் சொன்னது <br />வேங்கைகள் இதை தாங்குமா <br />குண்டை ஏந்திய நெஞ்சுகள் தூங்குமா? <br />வீரன் திலீபன் வாதாடினான் <br />பசி தீயில் குதித்து போராடினான் <br /><br /><br />வாயில் ஒருதுளி நீரதும் இன்றி வாசலில் பிள்ளை கிடந்தான் <br />நேரு பேரனின் தூதுவன் ஏனெனக் கேட்காது ஆணவத்தோடு நடந்தான் <br />சாவினில் புலி போனது தமிழீழமே சோகமாய் ஆனது <br />பார்த்து மகிழ்ந்தது ராணுவம் புலிச் சாவுக்கு ஆதிக்கம் காரணம் <br /><br />அன்னிய நாடது ஆயினும் நீயிங்கு ஆதிக்கம் செய்திட வந்தாய் - எங்கள் <br />மன்னன் திலீபனின் கோரிக்கை யாவையும் ஏளனம் செய்துமே கொன்றாய் <br />துரோகத்தோடு புலி போனது தமிழ் சந்ததியே சூடு கண்டது <br />நெஞ்சினில் ரத்தம் வழிந்தது உந்தன் ஒப்பந்தம் இங்கு கிழிந்தது..ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-33681922302714653782010-11-02T21:41:00.002-07:002010-11-02T21:42:33.996-07:00சொட்டும் விரலால் சுட்டிக்காட்டுசொட்டும் விரலால் சுட்டிக்காட்டு <br />முட்டும் பகையைத் தட்டிக்காட்டு <br />எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் <br />எங்கே தலைவா தடைகள்காட்டு <br />ஆணைபோட்டு வழியைக்காட்டு <br />எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் <br /><br />சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு <br />முட்டும் பகையைத் தட்டிக்காட்டு <br />எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் <br />எங்கே தலைவா தடைகள்காட்டு <br />ஆணைபோட்டு வழியைக்காட்டு <br />எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் <br />அண்ணல் ஆணையே எங்களின் செயல் வீச்சு <br />அதை செய்வதே எங்களின் உயிர் மூச்சு <br />எங்கள் வாழ்விற்கு வீரமே பலமாச்சு <br />புயலாய்ப் படைகள் விரையட்டும் <br />துகளாய்த் தடைகள் சிதறட்டும் <br />இடரும் துயரும் முடியட்டும் <br />தேசம் விடியட்டும் <br /><br />(சொட்டும் விரலால்.....) <br /><br />ஈகத்தில் பூரித்து வாழும் தென் தமிழீழம் <br />உயிரெங்கள் தமிழென்று வாழ்வோம் வாழ்வே பொற்காலம் <br />காடென்ன கடலென்ன எங்கள் பயணம் உயிரோட்டம் <br />கனவுக்குள் உணர்வுக்குள் தேச உறுதிக்கொடியேற்றும் <br />உரிமைமைதானே உயிரிலும் மேன்மை சொல்லிச் சொல்லி வளர்த்தாயே <br />ஓய்வு என்பது எங்களின் வாழ்வில் இறந்த பிறகு என்றாயே <br />விரையும் நெஞ்சில் பயமில்லை பிரிவு என்றும் தடையில்லை <br />விடியும் வரையும் ஓய்வில்லை எங்கும் நாம் செல்வோம் <br /><br />(சொட்டும் விரலால்.....) <br /><br />தேசத்தை நேசிக்கும் காற்றை நாங்கள் சுவாசிப்போம் <br />வீரத்தை பூசிக்கும் உயிராய் நாங்கள் சீவிப்போம் <br />காலத்தின் ஆழத்தில் நின்று வாழ்வைத் தியானிப்போம் <br />கல்லறை வீரரை நெஞ்சில் தாங்கிப் பயணிப்போம் <br />உந்தன் வாழ்வின் காலத்தில் தலைவா எங்கள் விடுதலை வரவேண்டும் <br />உன்னைப்போல தலைமை எங்கள் வாழ்வில் வருமா நீ வேண்டும் <br />எத்தனை குண்டுகள் கொட்டட்டும் எத்தனை உயிர்களைக் கொல்லட்டும் <br />எப்படி வந்தும் முட்டட்டும் எதிலும் நாம் வெல்வோம் <br /><br />சொட்டும் விரலால் சுட்டிக்காட்டு <br />முட்டும் பகையைத் தட்டிக்காட்டு <br />எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் <br />எங்கே தலைவா தடைகள்காட்டு <br />ஆணைபோட்டு வழியைக்காட்டு <br />எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் <br />அண்ணல் ஆணையே எங்களின் செயல் வீச்சு <br />அதை செய்வதே எங்களின் உயிர் மூச்சு <br />எங்கள் வாழ்விற்கு வீரமே பலமாச்சு <br />புயலாய்ப் படைகள் விரையட்டும் <br />துகளாய்த் தடைகள் சிதறட்டும் <br />இடரும் துயரும் முடியட்டும்.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-74860324993547455912010-11-02T21:41:00.001-07:002010-11-02T21:41:53.289-07:00ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள்ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது <br />ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள் (2) <br />பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு <br />போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும் <br /><br />ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது <br />ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள் <br /><br />உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும் (2) <br />ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும் <br />பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள் <br />போன பின்னர் நாமழுவோம் யாரறிவீர்கள் <br /><br />ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது <br />ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள <br /><br />தாயகத்து மண்ணைத்தானே காதலித்தீர்கள் - சாவை <br />எதிர் பாரர்த்து பார்த்துக் காத்திருந்தீர்கள் <br />பாயும் கரும்புலிகளாகிப் பகை முடித்தீர்கள் <br />பாதகரின் நெஞ்சினிலே போய் வெடித்தீர்கள் <br /><br />ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது <br />ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள <br /><br />கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதுண்டு <br />கரும்புலிகளின் விழிகளில் நீர் வழிவதுமுண்டு <br />அல்லும் பகலும் அண்ணன் பெயரை உச்சரித்தீர்கள் <br />அந்தப் பெயர் சொல்லி மேனி பிச்செறிந்தீர்கள் <br /><br />ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது <br />ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள் <br />பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் இங்கு <br />போக விடை கொடுத்த நெஞ்சம் துடிதுடித்திடும் <br /><br />ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் -இது <br />ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-59888960407823923652010-11-02T21:40:00.000-07:002010-11-02T21:41:15.051-07:00கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள் <br />கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள் <br />கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும் <br />சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் <br /><br />(கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள் <br />கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்) <br /><br />எங்கெங்கே அவன் கைதொட்டாலும் அங்கங்கே தனி அழகென்றாகும் <br />எங்கெங்கே அவன் பணியென்றாலும் தாயகத்தில் தானே மனசிருக்கும் <br />மண்ணில் வீசும் மண்வாசமாக மனங்கள் எங்கும் கலந்திருப்பான் <br />இதயமதின் சுவாசத்தைப்போல தேசமெங்கும் நிறைந்திருப்பான் <br />காதல் கொண்ட மக்களைக்காக்க காவல் செய்த வீரனென்றாவான் <br />சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் <br /><br />(கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள் <br />கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்) <br /><br />ஒற்றைச் சொல்லில் காவியமானான் ஒற்றைக் கல்லில் கோபுரமானான் <br />காலச்சருகில் கடலும் மறையும் இவனின் பெயரோ அழிவதில்லை <br />நாளை எங்கள் பள்ளிகள் எல்லாம் இவனின் நாமம் பாடங்களாகும் <br />காவல் தெய்வம் இவனின் முன்னே கைகள் எடுத்தே நாம் தொழுவோம் <br />ஈழம் உள்ள காலம் வரையும் நெஞ்சில் இவன் நினைவிருக்கும் <br />சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் <br /><br />கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள் <br />கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள் <br />கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும் <br />சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-70516986882352894522010-11-02T21:38:00.002-07:002010-11-02T21:39:43.257-07:00நெஞ்சிலே ரத்தம் கொட்டும் நினைவேநெஞ்சிலே ரத்தம் கொட்டும் நினைவே <br />நெருப்பாகும் - எங்கள் <br />நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே <br />மூத்தமகன் கிட்டு அவன் தோழர் <br />குட்டிசிறி மலரவன் ஜீவா குணசீலன் <br />றொகானுடன் நாயகன் தூயவன் <br />நல்லவன் அமுதனும் இந்திய துரோகத்தால் <br />கனலான செய்தியில் <br />நெஞ்சிலே ரத்தம் கொட்டும் <br />நினைவே நெருப்பாகும் - எங்கள் <br />நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே <br />எங்கள் <br />நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே <br /><br />கடலம்மா..... <br />எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா <br />எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா <br />கடலம்மா..... <br />எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா <br />கடலம்மா..... <br />எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா <br />எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா <br /><br />தேசவிடுதலைக்காய் தேசமெல்லாம் திரிந்த எங்கள் <br />நேசக் குழந்தைகளை நீசர் வழிமறிக்க(2) <br />கடலம்மா..... <br />எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா <br />எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா <br />கடலம்மா..... <br />எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா <br />எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா <br /><br />உலக கடற்பரப்பில் இந்தியப் பேயாட்சி <br />உண்மையைத் தின்னுமா? உலகம் மௌனமாகுமா?(2) <br />கடலம்மா..... <br />எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா <br />கடலம்மா..... <br />எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா <br />எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா <br /><br />தாயகப் பயணத்திலே தம்பி கிட்டு தோழருடன் <br />தியாக வேள்வியிலே தணலாகப் போகையிலும்(2) <br />கடலம்மா..... <br />எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா <br />கடலம்மா..... <br />எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா <br />எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா <br /><br />வானும் கடற்பரப்பும் உலகமதும் உள்ளவரை <br />தாயகத் தாகம் தணிவதில்லை எந்த <br />தடையிலும் பயணம் நிற்பதில்லை(2) <br /><br />எங்கள் தம்பி கிட்டு தோழர் மீது ஆணையம்மா <br />எங்கள் தம்பி கிட்டு தோழர் தேசம் நாளைம்மா <br /><br />நெஞ்சிலே ரத்தம் கொட்டும் <br />நினைவே நெருப்பாகும் - எங்கள் <br />நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-69725436225634126322010-11-02T21:38:00.001-07:002010-11-02T21:38:40.455-07:00தளராத துணிவோடு களமாடினாய்தளராத துணிவோடு களமாடினாய் <br />இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய் <br />அழகான திருமேனி தணலானதோ இந்தி <br />அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ <br /><br />தளராத துணிவோடு களமாடினாய் <br />இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய் <br /><br />நீ நடந்த பாதையெங்கும் பூ மலர்ந்தது <br />தமிழீழமெங்கும் உந்தனது பெயர் கலந்தது <br />தாயகத்துப் போர்க்களத்தில் நீ முழங்கினாய் <br />தம்பி தானையிலே தளபதியாய் நீ விளங்கினாய் <br /><br />தளராத துணிவோடு களமாடினாய் <br />இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய் <br /><br />அமைதி தேடி வந்த புறா சிறகிழந்தது (2) <br />கொடும் அரக்கர்களின் அம்பு பட்டு துடிதுடித்தது (2) <br />இமய நாடு உந்தனுக்கு குழி பறித்தது <br />உன்னை இழந்ததினால் எங்கள் நெஞ்சு பதைபதைக்குது <br /><br />தளராத துணிவோடு களமாடினாய் <br />இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய் <br /><br />சிங்களத்துப் படைகளோடு போராடினாய் (2) <br />வந்த இந்தியர்களோடு அன்று வாதாடினாய் (2) <br />பொங்குகின்ற புலிகளுக்கு வழி காட்;டினாhய் (2) <br />இன்று புயல் படுத்த மாதிரியாய் விழிமூடினாய் (2) <br /><br />தளராத துணிவோடு களமாடினாய் <br />இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய் <br />அழகான திருமேனி தணலானதோ <br />இந்தி அதிகாரம் உனக்கிங்கு எமனானதோ.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-17980377782837917972010-11-02T21:37:00.000-07:002010-11-02T21:38:05.305-07:00எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த <br />முருகனுக்கே அவன் நிகரானவன் <br />கடல் விழுங்கும் முன்பே நிலம் விழுங்க வந்த <br />பகை முடித்து புகழ் படைத்த மகுறொளியாற்றின் <br />பண்பலை அடக்கத்தில் வாழ்ந்த நம்பாட்டன் அந்த <br />முருகனுக்கே அவன் நிகரானவன் <br />முருகனுக்கே அவன் நிகரானவன் (எங்கள்) <br /><br />வேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான் <br />வேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான் <br />வேல் எடுத்தே அவன் பகை முடித்தான் <br />தமிழ் பகை முடித்தான் <br />பழம் தமிழ் பகை முடித்தான் <br />துவக் எடுத்தான் இவன் துவக் எடுத்தான் <br />துவக் எடுத்தான் இவன் துவக் எடுத்தான் <br />துவக் எடுத்தே இவன் துவக்கி வைத்தான் <br />படை துவக்கி வைத்தான் <br />புலிப்படை துவக்கி வைத்தான் (எங்கள்) <br /><br />ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக <br />அடிமையின் அடிமைக்கும் அடிமைகளாக <br />வாழ்ந்தவர் வேதனை முடிக்க வந்தான் <br />நம் தமிழின எழுச்சியை முடுக்க வந்தான் <br />மேடையில் பேச ஏறியதில்லை <br />தேர்தல் சீற்றிலும் இறங்கியதில்லை (மேடையில்) <br />தாயை அதிகம் பார்த்தவன் இல்லை <br />தாயை அதிகம் பார்த்தவன் இல்லை <br />தமிழ்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை <br />தமிழ்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை <br /><br />எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த <br />முருகனுக்கே அவன் நிகரானவன் <br />முருகனுக்கே அவன் நிகரானவன்.ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3681964183258002279.post-2990869911441140882010-11-02T21:36:00.000-07:002010-11-02T21:37:31.494-07:00கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம் <br />உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம் <br />ஆஆஆஆஆஆ......... <br /><br />[மண்மீது பற்றுக் கொண்டீர் மறைவிடம் சேர்ந்தீர் <br />மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்] 2 <br />எரித்திடும் வேளைதனில் சிதையாய் விழுந்தீர் <br />[மறைந்திடுமோ உம் நினைவு <br />அழிந்திடுமோ உம் கனவு] 2 <br />விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம் <br />விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம் <br />ஆஆஆஆ........ <br /><br />கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம் <br />உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம் <br /><br />[தன்மானம் காக்கவென்று தாயினைப் பிரிந்தீர் <br />தாய்நாட்டைக் மீட்கவென்று உறவுகள் மறந்தீர்] 2 <br />விழுகின்ற போதும் எம் விடிவினை நினைத்தீர் <br />[எரிமலையாய் நாம் எழுவோம் <br />விடுதலைக்காய் தலை தருவோம்] 2 <br />விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம் <br />விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம் <br />ஆஆஆஆ......... <br /><br />கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம் <br />உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம் <br /><br />[பூவாக வாழ்ந்திங்கு புயலாயெழுந்தீர் <br />புதுவரலாறெழுதி களந்தனைச் சேர்ந்தீர்] 2 <br />பூகம்பப் பொறியாய் எம் மனதினில் பதிந்தீர் <br />[கடமையினை நாம் மறவோம் <br />பயிற்சியினை நாம் பெறுவோம்] 2 <br />தாயகத்தை மீட்டு எங்கள் தலைவன் புகழ் பாடிநிற்போம் <br />தாயகத்தை மீட்டு எங்கள் தலைவன் புகழ் பாடிநிற்போம் <br />ஆஆஆஆ....... <br /><br />கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம் <br />உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்.....ஈழ மகன்http://www.blogger.com/profile/10782181318697104859noreply@blogger.com0