Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Friday, March 20, 2009

எம்மைப் பற்றி

இவ் இணையத்தளம் 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மலேசியாவில் ஆரம்பிக்கப்பட்டது.எமது நேரத்தினை ஒதுக்கி உலகவாழ் தமிழ் மக்களுக்கான ஒரு சேவையாக இத்தளத்தளம் உருவாக்கப்பட்டது.

எமது இணையத்தளத்தில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை மற்றும் ஆதாரங்கள் என்பவற்றை இயன்றவரை உறுதி செய்து வெளியிடுவதற்கே நாம் விரும்புகிறோம். ஆனாலும் அவ்வாறு செயற்படுவதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் நேரம் மேற்படி செய்தியை பழைய செய்தியாக்கிவிடக்கூடிய சாத்தியக்கூறு உண்டு.

அத்தோடு மேற்குலக நாடுகளில் இருந்தவாறு தாயகத்து நிகழ்வுகளின் ஆதாரங்களை உறுதிப்படுத்துவதற்கான தடையாக நாடுகளிற்கிடையேயான நேர வித்தியாசம் அமைந்துள்ளது. எனவே எமது தளத்தில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை அல்லது ஆதாரத் தரவுகள் என்பவற்றிற்கு நாம் பொறுப்பாளிகளல்ல.

தமிழ் பேசும் மக்களிற்கு தாயக மற்றும் புலம் பெயர் செய்திகளை தருவதுடன் பக்க சார்பற்ற கண்ணோட்டத்தை தருவதே எமது நோக்கம். இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் சூன்யத்திற்கு ஒரே தீர்வு தனியான தேசமொன்றை அவர்கள் அமைப்பது என்பதில் நாம் அசையாத நம்பிக்கை வைத்துள்ளோம். இன்று அவர்கள் எதிர்கொள்ளும் அந்த போரட்டத்திற்கு ஒரு பார்வையாளர் என்ற படியிலிருந்து ஒரு படி மேல் சென்று ஒரு சிறிய பங்களிப்பை செய்வதே எமது நோக்கம். இந்த பங்களிப்பு ஒரு கடுகளவாகவே இருந்தாலும் அதன் பங்களிப்பு ஒரு அர்தமுள்ள பங்களிப்பாகவே இருக்கும்!தமிழ் பேசும் மக்களிற்கு தாயக மற்றும் புலம் பெயர் செய்திகளை தருவதுடன் பக்க சார்பற்ற கண்ணோட்டத்தை தருவதே எமது நோக்கம். இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் சூன்யத்திற்கு ஒரே தீர்வு தனியான தேசமொன்றை அவர்கள் அமைப்பது என்பதில் நாம் அசையாத நம்பிக்கை வைத்துள்ளோம். இன்று அவர்கள் எதிர்கொள்ளும் அந்த போரட்டத்திற்கு ஒரு பார்வையாளர் என்ற படியிலிருந்து ஒரு படி மேல் சென்று ஒரு சிறிய பங்களிப்பை செய்வதே எமது நோக்கம். இந்த பங்களிப்பு ஒரு கடுகளவாகவே இருந்தாலும் அதன் பங்களிப்பு ஒரு அர்தமுள்ள பங்களிப்பாகவே இருக்கும்!

எமது தளத்திற்கு வருகை தருபவர்கள் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்தால் நாம் மேலும் எமது சேவையை மேலும் மேம்படுத்த அது வாய்ப்பாக அமையும்.அத்துடன் உங்களது செய்திகள் மற்றும் கட்டுரைகளை எமக்கு எழுதி அனுப்புவதற்கு thaimady@gmail.comஇந்த மின்அஞ்சல் முகவரி மூலமாக அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.



அன்புடன்
கபிலன்.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.