Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Friday, April 10, 2009

தெரு நாய்களுக்கு ஒரு பகிரங்கக்கடிதம்

திரு.பிள்ளையான்
திரு.கருணா,
திரு.டக்ளஸ் தேவானந்தா,


ஆகியோருக்கு இலங்கையரசின் யதார்த்த நிலை என்ன என்பது பற்றிய பகிரங்கக்கடிதம்.

உனை நீ அறி

இலங்கையின் வடக்கில் தமிழர்களை இலங்கையரசு அழித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் தமிழனாக இல்லாவிட்டாலும் ஒரு மனிதனாகவாவது இலங்கையரசிடம் நேருக்கு நேர் நின்று கேட்க முடியாததிராணியற்றுப் போயிருக்கிறீர்கள்.


உங்களால் அது முடியாது. நீங்கள்தான் மானம் ரோசம் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்களே. உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா. ஜனாதிபதி உட்பட அனைத்து சிங்கள அமைச்சர்களும் முகத்துக்கு நேரே சிரிப்பார்கள், நாமட்டுச் சிரிப்புடன் கைலாகு கொடுப்பார்கள் அவரவர் உள் மனதில் பச்சைத் துரோகிகள் தங்களுடைய இனத்துக்கே துரோகம் செய்தவர்கள் நாளைக்கு எங்களுக்குச் செய்யாமலா விடப் போகிறார்கள் என்று உங்களைப் பற்றி நினைப்பாரகள். அவர்கள் அப்படி நினைப்பது உங்களுக்குத் தெரியுமா?.


இராணுவத்தளபதி தமிழர்களைப்பற்றி பொறுப்பற்ற விதத்தில் பேசியதைப்பற்றி அவரிடம் உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது அப்படிக் கேட்க என்று கேட்டீர்களா?. கேட்க மாட்டீர்கள் ஏனென்றால் மந்திரிப் பதவி போய்விடும் என்ற பயம்.

முழுத்தமிழர்களையும் இலங்கையிலிருந்து அழித்தொழிப்பதுதான் இலங்கையரசின் நோக்கம். உங்களையும் வைத்துக் கொண்டுதான் இதனை இலங்கையரசு செய்கின்றது. இலங்கையில் அழித்தொழிக்கப்படும் ஒவ்வொரு தமிழனின் இறப்புக்கும் நீங்களுந்தான் பொறுப்பு.

இலங்கையில் வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகைகளைப் பாருங்கள். ஒவ்வொரு சொல்லிலும் இனத்துவேசம் விசமாகத் ததும்பி வழிகின்றது. அந்தப் பத்திரிகைச் செய்திகளுக்கு தங்கள் கருத்தை எழுதும் சிங்கள வாசகர்கள் முற்றுமுழுதாக தமிழர்களுக்கெதிரான சிங்களவாதிகளாகவே இருக்கிறார்கள். ஒருவரிடமும்கூட நேர்மை நியாயத்தைக் காண முடியவில்லை.

ஆனால் நீங்கள் மனிதர்களாகக்கூட இல்லையே.சிங்களவர்களை மதிக்கிறோம். அமைச்சர்களிலிருந்து சாதாரண அன்றாட உழைப்பாளிச் சிங்களச் சகோதரர்கள் வரை இன மானம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். எந்த ஒரு சிங்களச் சகோதரனும் தன் இனத்தைக் காட்டிக் கொடுக்கவில்லை. தன் இனத்தைக் காட்டிக் கொடுக்காத அத்தனை சிங்களச் சகோதரர்களையும் மதிக்றோம். ஆனால் நீங்கள்….? துரோகிகளேதான்.

உலக நாடுகளே! பாருங்கள்! தமிழர்கள் எல்லா உரிமைகளுடனுமே இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தக் குறையையும் நாங்கள் வைக்கவில்லை. எங்கள் அமைச்சரவையில்கூட தமிழ் மந்திரிகளிருக்கிறார்கள் என்று சொல்லி உங்களை சந்தை மாடாக சுட்டிக்காட்டி உலகின் பார்வையைத் திசைதிருப்பி தமிழருக்கு மந்திரிப் பதவியைக் கொடுத்தவர்கள் தமிழர்களையா அழிப்பார்கள் என உலகை நம்ப வைக்கின்ற இலங்கையரசின் இராசதந்திரத்தையாவது நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்களா?

தமிழர்களுக்கு உரிமை கொடுக்காமலிருப்பதற்கும், தமிழர்களை அழிப்பதற்கும் நீங்கள்தான் பகடைக்காய்களாகியிருக்கிறீர்கள் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா? அமைப்பை பலமாக்குவதற்கே பேச்சுவார்த்தை என்று காலத்தை கடத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் சொன்னதாக ஜனாதிபதியிடம் கருணா சொல்லியிருந்தார். இதைக் கேட்டு ஜனாதிபதி அதிர்ச்சியடையமாட்டார், ஏனென்றால் நாங்களும் அதைத்தான் செய்தோம், எங்களுடைய படைகளைப் பலப்படுத்தவே பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்தோம்’ என்ற உண்மையை மட்டுமல்ல கருணாவின் அறியாமையையும் நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொள்வார். கருணாவைப் போன்ற ஒரு துரோகியை பார்க்கவே முடியாது. அத்தனை மாவீரர்களின் ஆத்மாவின் உயிர்களும் கருணாவைப் பாரத்துக் கொண்டுதானிருக்கின்றன.

பேசு;சுவார்த்தைக் காலத்தில் அவரவர் பக்கத்தை பலப்படுத்துவது இராணுவ தந்திரோபயங்களில் ஒன்று. உலக நாடுகளில் உள்ள இராணுவ அமைப்புகள் எல்லாம் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக தங்கள் தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள.;

உங்கள் கைகளாலேயே உங்கள் கண்களைக் குத்திக் கொண்டிருக்கிறது இலங்கையரசு. அது தெரியுமா உங்களுக்கு? ஒவ்வொரு சிங்கள அமைச்சர்களும் கருணாவுக்கு கைலாகு கொடுக்கும் போதும் பேசும் போதும் நீ எத்தனை சிங்கள இராணுவ வீர்களைக் கொன்றிருப்பாய்; மவனே வசமாக மாட்டியிருக்கிறாய் எங்களிடம், உன்னுடைய பலவீனத்தை எல்லாம் எங்கள் பலமாக்கி எத்தனை தந்திரப் பொறிகள் வைத்து எம்பக்கம் கொண்டு வந்திருக்கிறம் எனக் கறுவிக் கொள்வதாவது கருணாவிற்கு தெரியுமா?

ரோச மானம் உள்ள தமிழர்களாக மந்திரிப்பதவிகளைத் தூக்கியெறிந்து தமிழர்கள் பக்கம் வந்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்துமன்னிப்புக் கேளுங்கள். இல்லையெனில் எதிர்காலத்தில் ஈழத்தமிழரின் தமிழீழ விடுதலை வரலாற்றில் எட்டப்பன், காக்கைவன்னியன், அந்திரேசு என்ற பெயர்களைப் போல் உங்கள் பெயர்களும் இடம்பெறும். கருணா…..என்று ஆரம்பிக்கும் பெயர்களை வைத்திருப்பவர்களை மற்றவர்கள் ‘ கருணா ‘ என்று அழைத்து வந்தார்கள். இப்பொழுது அவர்கள் சொல்கிறார்கள் ‘தயவுசெய்து கருணா என்று அழைக்காதீர்கள், எங்கள் முழுப்பெயரையும் சொல்லி அழையுங்கள்’ என்று. ஏனென்றால் ஒரு துரோகியின் பெயரில் என்னை அழைக்க வேண்டாம் என்பதற்காகவே.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.