Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Wednesday, March 25, 2009

பெண் புலிகள்......

எமது பண்டைய மறத்தமிழச்சிகள் சீறி வரும் புலியைக் கூட முறத்தால் விரட்டியடித்தனர் என்று தமிழர்கள் எப்பொழுதும் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. பண்டைய தமிழச்சிகளை நாம் பார்த்தது கிடையாது, ஆனால் கண்டிப்பாக அவ்வாறுதான் எமது பண்டைய தமிழ் பெண்கள் இருந்திருப்பார்கள் என்பதை இன்றைய தமிழ் மறவத்திகளைப் பார்க்கும் போது திண்ணமாகிறது. இன்றைய தமிழ் பெண்கள் புலியை முறத்தால் விரட்டவில்லை; தாங்களே புலியாகி,எதிரியை கொன்றொழிக்கின்றனர்.

எமது ஈழத்தமிழ் பெண்ணினம்,சிங்கள அரசின் பேரினவாத பிடியில் சிக்கி, தங்கள் உயிரை விட மேன்மையானதாக போற்றிக் காக்கும் கற்பைக் காப்பாற்ற கையில் எடுத்தது முறத்தையல்ல,நெருப்பைக் கக்கும் AK 47-ஐ.

நமது பண்பாட்டை ஆட்டம் 100 வகை, 200 வகை என்று சீரழிக்கும் பெண்களுக்கு மத்தியில்,சனிக்கிழமை வந்தால்,போதையிலும் கும்மாளத்திலும் கூடிக்கழிக்கும் பெண்களுக்கு மத்தியில், பண்பாட்டை காக்கும் தமிழச்சிகளையும், தாய்மண்ணின் சுதந்திரம் காக்க கையில் ஆயுதம் எந்திய புலிப்பெண்களையும் பார்க்கையில் எமது தமிழினத்தின் பண்பாடும்,மரபும் அவ்வளவு சீக்கிரத்தில் மறைந்து விடாது என்ற நம்பிக்கை துளிர் விடுகிறது.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.