Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Wednesday, March 25, 2009

தமிழினத்தலைவன்........

உலகத்தில் உள்ள தமிழருக்கெல்லாம், யார்தான் தலைவர் ??இராசேந்திர சோழனுக்குப் பிறகு அந்த தனித்தன்மை மிகுந்த தமிழன் ஒருவன் இருக்கிறானென்றால், அது தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.
ஒரு சாரார்,கலைஞரை உலகத் தமிழரின் தலைவர் என்று கூறினாலும், அதில் எமக்கு உடன்பாடில்லை. பக்கம் இருக்கும் தேசத்தில் தமிழரை இன அழிப்பிலிருந்து காப்பற்ற முடியாமல்,அரசியல் காரணங்களுக்காக சூழ்நிலை கைதியாகிக் கிடக்கும் கலைஞரை நினைத்து உலகத்தின் எந்த மூலையில் உள்ள தமிழனும் பொறுமுவானே தவிர, பெருமைக் கொள்ள மாட்டான்.

தமிழர் என்றால் அடிமைகள் என்றும் ஏமாளிகள் என்றும் வெள்ளையன் குறித்து விட்டு சென்றுள்ள கூற்றை,உலகில் வாழும் தமிழர்களெல்லாம் நிருபித்து,சாசனம் எழுதிக்கொடுக்காமல் பல விஷயங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தின் அடிமை விலங்கை உடைத்து, தன்மானத்தை காக்க, வந்த தமிழர் தலைவன் பிரபாகரன் மட்டுமே. தமிழன் எங்கு போனாலும் அடிதான் வாங்கினான், திரும்பக்கொடுத்தது தமிழீழத்தில் மட்டும்தான்.

இராசேந்திரன் காலத்தில்,முப்படைகளை திரட்டி கம்போஜம் வரை வெற்றிக் கொண்டான் என பெருமை மட்டும்தான் நமக்கு மிஞ்சும் என்றிருந்த வேளையில், தரைப்படை,கடற்படை,வான்பாடை என்று நவீன வளர்ச்சியின் தேவைக்கேற்ப முப்படைகள் கண்டு தமிழரின் பெருமையை நிலைநிறுத்தியது பிரபாகரன்தான். அந்த இராசேந்திரன் கொண்டு சென்றது புலிக்கொடிதான் ; இன்றைய தமிழீழ இராச்சியத்தின் சின்னமும் புலிக்கொடிதான்.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.