Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, May 12, 2009

செத்துக் கொண்டிருக்கும் வன்னி மக்களை கண் கொண்டு பார்க்காத சாவதேச சமூகம்!

திட்டமிட்டு இந்திய, ஸ்ரீ லங்கா கூட்டுப்படைகளால் கொடுங்கோன்மையான இன அழிப்பு போரில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள், பாதுகாப்பு வலயப் பகுதிகள், நிவாரண விநியோக நிலையங்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த உண்மை செய்திகளை எந்த சர்வதேச ஊடகங்களோ, பத்திரிகைகளோ கண்டுகொள்ளவில்லை. இதனைப் பல தமிழ் ஊடகங்களும் வெளிப்படுத்துவல்லை. ஒரு இரவில் 2500 பொதுமக்களை பலியெடுத்ததைக் கூட ஒரு ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை.

09-05-2009 அன்று சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார விடுத்துள்ள அறிக்கையில் பாதுகாப்பு வலயப் பகுதி 04 kmஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதற்கு மறுநாள் சனிக்கிழமை இரவிலிருந்து ஞாயிற்றுக் கிழமை அதிகாலைக்கு இடைப்பட்ட ஒரு தனியிரவிலேயே இரசாயன, நச்சு குண்டுகளை மழையெனப் பொழிந்து, கிட்டத்தட்ட 2500 க்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களைக் காவுகொண்டது அரச பயங்கரவாதம். இதனைவிட ஆனால் அரசியல் வாதிகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் இந்த ஊடகங்கள் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்றன. ஆக இந்தப் படைகளின் நோக்கம் என்னவென எல்லோருக்கும் புரியவேண்டும். பொதுமக்களை ஓரிடத்தில் ஒன்றுகூடுமாறு உத்தவிட்டு, ஓரிடத்தில் மக்களைச் செறிவாகக்கி, ஒட்டுமொத்தமாக அவர்களைக் கொன்றொழிப்பதன் சூத்திரமாகவே இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார விடுத்த அறிக்கையிலிருந்து அவர்களின் எதிர்பார்ப்பும் எத்தனிப்பும் இருந்திருக்கிறது, கூடவே செயன்முறைப் படுத்தியும் உள்ளனர்.

சண் ,கலைஞர், ஜெயா போன்ற பெரும்பான்மையான ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக உள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. உண்மை செய்திகள் வெளிவந்தால் நம் குட்டு வெளிப்பட்டு விடும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் பிற ஊடகங்களையும் விளம்பரங்கள் தர மாட்டோம் என்று சொல்லி மிரட்டுகிறார்கள். செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டால் தான் தாய் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு உண்மை நிலவரம் தெரிய வரும். இணைய தளங்களை பார்க்கும் வசதி சாதாரண மக்களுக்கு இல்லை.

தமிழின விரோதிகளான டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற பேட்டியையும், புலிகளின் அழிவுச் செய்தியையும் முதல் பக்கத்தில் வெளியிடும் இந்த ஊடகங்களுக்கு அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது கண் தெரியவில்லையா?. பாகிஸ்தானில், இராக்கில் குண்டு வெடிப்பையும், கிரிக்கெட் வீரர்கள் தாக்கப்பட்டதையும் பக்கம் பக்கமாக படங்களுடன் ஆராய்சிக் கட்டுரை வெளியிடும் இந்த ஊடகங்களுக்கு வன்னியில் பிஞ்சு குழந்தைகள் கொன்று குவிக்கப்படுவது தெரியவில்லையா?

சன் / ஜெயா தொலைக்காட்சிகளில் இராணுவம் வெளியிட்ட இடம் பெயர் மக்களின் மீது நடந்த குண்டு வெடிப்பை திரும்ப திரும்ப காட்டியவர்களுக்கு அப்பாவி மக்கள் கொல்லப்படும் கானொளிகள் கிடைக்க வில்லையா? 100 க்கும் மேற்பட்ட சேனல்களை வைத்திருக்கும் சன் குழுமமும், கலைஞர் தொலைக்காட்சியும் இப்படி துரோகம் செய்தால் பிறகு எப்படி உண்மைகள் மக்களை சென்றடையும்? இன்னமும் சன் செய்திகளில் ராணுவம் வெளியிடும் கானொளிகள்தான் காண்பிக்கப்படுகின்றன. புலம் பெயர் வாழ் தமிழர்களின் ஆதரவில் பணம் சம்பாதித்து கொழுத்துப்போய் உள்ள தினமலர், தினகரன் பத்திரிக்கைகள், சன் குழுமம், ஜெயா, கலைஞர் தொலைக்காட்சிகள் தொடர்ந்து தமிழின விரோத போக்கை கடைப் பிடித்து வருகின்றன.

அண்மையில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் தயாரித்து வெளியிடப்பட்ட ஒரு காணொளியை சில ஊடகங்கள் ஒளிபரப்பின. அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகச் சித்தரிப்பதற்க்காக தயாரிக்கப்பட்டது. அதை தாங்கள் உலங்கு வானூர்தியிலிருந்து பதிவு செய்ததாகவும் படைத்துறைப் பரப்புரை செய்தது. அந்தத் திருப்படத்தினை நானும் தரிசித்திருக்கிறேன். அதில் இரண்டு ஆயுததாரிகள் கூட்டமாக நிற்கும் பொதுமக்களை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறார்கள். அதாவது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்ல முயற்சிக்கும் புதுமக்களை விபு தடுத்தி நிறுத்துவதையும், அதனையும் மீறி செல்லும் மக்களை நோக்கிப் துப்பாக்கிப்பிரயோகம் செய்கின்றனர் என்றும் அந்தக் கானொளியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெறும் இரண்டு மூன்று ஆயுததாரிகள் பொதுமக்களை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் போதும் மக்கள் ஓடாது, அசைவற்று, அவ்விடத்திலேயே நிக்கிறார்கள். எந்தவொரு வீரரும் தம்மை நோக்கிச் சுடுகலன்களால் சுடும் பொது தற்காப்புக்காகவேனும், ஒதுங்காமல் அப்படியே சிலையாக நிற்க மாட்டார்கள். ஆக இதிலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்பவர்கள் யார், அம்மக்கள் ஏன் ஓடாமல் நிற்கிறார்கள், என்பன வெளிப்படையாகவே தெரிகிறது. இவையெல்லாம் சர்வதேசத்திற்கு புரியாததா? அல்லது புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறதா? என்பது நம் எல்லோர் மனதிலும் எழுகின்ற ஓர் எழிமையான கேள்வி.

இவற்றைஎல்லாம் இத்தனை காலமாக மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையினரும் தங்கள் நெடுநாள் அமைதியைக் கலைத்து வெளியிட்ட செய்மதிப் படத்தின் மூலம் சிறிலங்கா அரசை சற்று கண்டிக்க முயற்சித்தது. ஆனாலும் அதனை மறுத்த அதி உத்தமரிம் பாசக்காரத் தம்பி கோத்தபாய ராயபக்க்ஷா, இது முற்றிலும் தவறானது, நாம் இப்படியாகத் தாக்குதல்களைச் செய்வதில்லை என்றுரைத்தார். அத்தோடு நில்லாமல் ஐநாவினுடைய சென்மத்ய்ப் படம் உண்மையில் விஞ்ஞான பூர்வமானவையள்ளன என்றும், ஐநா விடுதலைப் புலிகளுக்காக உளவு வேளையில் ஈடுபாடுகிறதா எனவும் சீறி அதற்கான விளக்காத்த இலங்கைக்கான ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம் கோரினார். இதற்க்கு தகுந்த விளக்கம் தராது போனால் சட்ட நடவெடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோமெனவும் விஷனம் தெரிவித்தாதோடு ஐநா வதிவிடப் பிரதிநிதி நாடுகடத்தப் படலாமேனவும் எச்சரித்திருந்தார். அடுத்தநாள் ஐநாவின் வதிவிடப் பிரதிநிதியை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமே அழைத்து விளக்கம் கோரினார், அதற்க்கு அவர், உண்மையில் இதனை நான் தலைமைச் செயலகத்தோடு தொடர்புகொண்டு ஆலோசனை பெற்று அதற்கான விளக்கத்தினைத் தருவதாக உறுதியளித்தார். பின்னர் அவ்வாறே உண்மையில் அந்தப் படம் விஞ்ஞான பூர்வமானது தானதாகவும், விடுதலைப் புலிகளுக்கான உளவு வேளையில் நாங்கள் ஈடுபட வில்லையெனவும் கூறினார். அத்தோடு அவ்விடயம் இன்றுவரை அமைதியாகவே இருக்கிறது. ஆக இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஐநா சிறிலங்காவுக்கு பயந்து வாய் மூடி அமைதியாகி விட்டதாவென எம்மை எண்ணத் தோன்றுகின்றது.

எப்பாவது ஒருமுறையாவேனும் நீதியாக, நியாமாக வரும் குரல்களையும் சிங்களம் மிரட்டி அடக்கி, சிங்களர்களும், சிங்கள அரசும் தொடர்ந்து தமிழர்களுக்கெதிராகவும், தமிழீழ விடுதலைக்கேதிராகவும் பொய்ப்பிரச்சார யுத்தத்தை வேகமாக முன்னெடுத்து வருகிறார்கள். Youtube, Wikimapia, defence போன்றவற்றை பார்த்தால் அவர்களுடைய நோக்கம் புரியும். 8 கோடி தமிழ் மக்கள், எண்ணற்ற தொலைக்காட்சிகள், கட்டமைப்பு வசதிகளை தமிழர்கள் கொண்டுள்ள போதிலும் சிங்களர்கள் நம்மை விட வேகமாக முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஆகவே உலகத் தமிழ் சங்கங்கள், தமிழர்கள் அனைவரும் தமிழ் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வழிக்கு வருவார்கள். புலம் பெயர் தமிழர்கள், தமிழ் சங்கங்களின் ஆதரவு இல்லாமல் அவர்களால் எந்தப் பத்திரிகைகளோ, சந்தா செலுத்திப் பெற்றுக் கொள்ளும் தொலைக்காட்சி ஊடகங்களையோ நடத்த முடியாது. அவ்வாறு புலம் பெயர் தமிழர்களின் ஆதரவில்லாமல் அவர்களால் அவர்கள் இலக்கை அடைய முடியாது.

மக்கள் புரட்சியை தடுக்கும் நோக்கில் சிங்களத்தின் எச்சில் எலும்புக்காக, அவர்களின் அராக்கியத்துக்குத் துணைபோய் தமிழின துரோகத்தை செய்து வரும் இந்த ஊடகங்களுக்கு புலம் பெயர் வாழ் தமிழர்களும், தமிழர்களின் அமைப்புக்களும், எம்மைப் போன்ற தமிழ் ஊடகங்களும் விரைவாகத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

தாயகத்திலிருந்து,

கவே.கரிகாலன்.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.