Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, November 2, 2010

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்
ஆஆஆஆஆஆ.........

[மண்மீது பற்றுக் கொண்டீர் மறைவிடம் சேர்ந்தீர்
மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்] 2
எரித்திடும் வேளைதனில் சிதையாய் விழுந்தீர்
[மறைந்திடுமோ உம் நினைவு
அழிந்திடுமோ உம் கனவு] 2
விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்
விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்
ஆஆஆஆ........

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்

[தன்மானம் காக்கவென்று தாயினைப் பிரிந்தீர்
தாய்நாட்டைக் மீட்கவென்று உறவுகள் மறந்தீர்] 2
விழுகின்ற போதும் எம் விடிவினை நினைத்தீர்
[எரிமலையாய் நாம் எழுவோம்
விடுதலைக்காய் தலை தருவோம்] 2
விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்
விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்
ஆஆஆஆ.........

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்

[பூவாக வாழ்ந்திங்கு புயலாயெழுந்தீர்
புதுவரலாறெழுதி களந்தனைச் சேர்ந்தீர்] 2
பூகம்பப் பொறியாய் எம் மனதினில் பதிந்தீர்
[கடமையினை நாம் மறவோம்
பயிற்சியினை நாம் பெறுவோம்] 2
தாயகத்தை மீட்டு எங்கள் தலைவன் புகழ் பாடிநிற்போம்
தாயகத்தை மீட்டு எங்கள் தலைவன் புகழ் பாடிநிற்போம்
ஆஆஆஆ.......

கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்.....

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.