Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, November 2, 2010

விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும்

விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும்
கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்
[புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்
எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே
தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே
இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே
தமிழனத்துக்காக இரந்து தீயில் எரிந்த வீரர்களே

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

எதிரிகள் பாடி வீடுகள் ஏறி நடந்த வேங்கைகளே
உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வீரர்களே
காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர்சொல்லும்
இனி காலம் யாவும் நீளும் போது எங்கள் பெயர் வெல்லும்

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

[விண்வரும்.....]

உங்கள் கனவே எங்கள் நினைவாய் எழுந்து நிற்கின்றோம்
உயிர் ஓடும் குருதி யாவும் சொரியும் நிலத்தில் நிற்கின்றோம்
தலைவன் வழியில் புலிகள் அணியாய் நடந்து செல்கின்றோம்
வரும் தடைகள் யாவும் உடையும் உடையும் நிமிர்ந்த கொள்கின்றோம்

[எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.