Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Wednesday, April 29, 2009

இலங்கையில் மனிதப்பேரவலம் : பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்


இலங்கையில் நடைபெறுவது மனிதப்பேரவலம் என இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் சனல் 4 தொலைக்காட்சியின் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
போர் நடக்கும் பகுதிக்குள் சிக்குண்டுள்ள மக்களும், அதற்கு வெளியில் முகாம்களிலுள்ள மக்களும் மனிதப்பேரவலத்திற்குள் சிக்குண்டுள்ளனர் எனக்குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கான அனுமதி மட்டுப் படுத்தப்பட்டிருக்கின்றன, மனிதாபிமான தன்னார்வ அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன என மேலும் தெரிவித்த அவர், உதவி அமைப்புக்கள் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
உதவி அமைப்புக்களை கட்டாயமாக அனுமதிக்க வேண்டும் என்று கோரும் நோக்கிலேயே தாம் இலங்கை வந்திருப்பதாகவும் அதற்கான அழுத்தங்களை மேற்கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.