Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Monday, May 4, 2009

இன்று மதியம் முதல் இராணுவத்தினர் அகோர எறிகணைத் தாக்குதல் நடத்துகின்றனர்

இன்று மதியம் முதல் இராணுவத்தினர் அகோர எறிகணைத் தாக்குதலை தொடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்று நேரத்திற்கு முன்பாக முள்ளிவாய்கால் மற்றும் வட்டுவாகல் போன்ற பிரதேசங்கள் மீது கடும் எறிகனைகள் வந்து வீழ்ந்த வண்ணம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல தரையிறக்க முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியடைந்த நிலையில், இன்று காலை புலிகள் நடத்திய தாக்குதலில் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்ட நிலையிலும் இராணுவத்தினர் இந்த எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது. பல பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படும் அதேவேளை பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் முழு சேதவிபரங்களையும் பெற நாம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். அதுவரை அதிர்வின் செய்தியுடன் இணைந்திருங்கள்.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.