Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, May 26, 2009

தலைவர் பிரபாகரன் நலமாக உள்ளார்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

                                தலைவர் பிரபாகரன் நலமாக உள்ளார்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ந்தச் செய்திக்காகத்தான் இத்தனை தவமும் பிரார்த்தனையும் கோடிக்கணக்கான தமிழ் மக்களால் கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. போரில் வீர மரணம் அடைந்த தளபதிகளுக்கு துக்கத்துடன் வணக்கம் செலுத்திய மக்கள், தங்கள் தலைவன் நலமாக இருக்க வேண்டும் என்று தெரிந்த அத்தனை வழிகளிலும் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இப்போது முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு, பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் ‘தமிழ்நெட்’ இணையத்தளத்துக்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:

“எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார். தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்.

தமிழீழ விடுதலைக்கு ஆதரவுக் குரல் எழுப்பி வரும் உலகத் தமிழ் சமுதாயத்தை குழப்புவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பான பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவதில் முனைப்பாக. மக்கள் திடமுடன் போராடுவதற்கு தயாராக இருங்கள்.

தலைவரின் இருப்பிடம் மற்றும் விவரங்கள் குறித்து இப்போது எதுவும் கூற முடியாத நிலையில் உள்ளோம். அது எமது தலைவரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது,” என்றார் அவர்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ நெடுமாறன், வைகோ, சீமான் போன்ற பல்வேறு தமிழ் உணர்வாளர்களும் ஆதரவாளர்களும் கூறி வந்தனர்.

ஆங்கில ஊடகங்கள் தொடர்ந்து இலங்கை அரசின் செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து வந்தாலும், ஒரு கட்டத்தில் இலங்கை ராணுவத்தின்  மோசடிகள் புரிய ஆரம்பித்ததும் அமைதியாகிவிட்டன.

பிரபாகரன் பற்றிய இந்த மோசமான வதந்தியை இலங்கை அரசு பரப்பிய கணத்திலிருந்தே, அது நம்பத் தகுந்ததல்லை, என்பதை நம்பத்தகுந்த வட்டாரங்களில் உறுதிப்படுத்திக் கொண்ட பின் கூறி வந்துள்ளோம்.

இருப்பினும் விடுதலைப் புலிகள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த வார்த்தையும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இப்போது முதல் முறையாக பிரபாகரன் நலமுடன் இருப்பது குறித்த அறிவிப்பு புலிகள் தரப்பின் முக்கியப் பொறுப்பாளர் வழியாக வந்திருக்கிறது.

சிங்கள இனவாதத்தை வேறொரு புதிய களத்தில் பிரபாகரன் எதிர்கொள்வார் என்றும் அதற்கான ஆயத்தங்கள் முடிந்ததும் அவர் தமிழர் மத்தியில் தோன்றுவார் என்றும் ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.