Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, November 2, 2010

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது
வரும் வார்த்தைகளால் உம்மை தொழ முடியாது
தாயிற்கும் தன் பிள்ளையின் முகம் தெரியாது
எங்கள் தலைமுறை உங்கள் பெயர் அறியாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

[நேற்று வரை இங்கு பூத்திருந்தீர்
பெரும் நெருப்பெனப் போகவாக் காத்திருந்தீர்] (2)
போற்றியே பாடிட மொழிகளில்லை
கரும்புலிகளின் நினைவுகள் அழிவதில்லை

வாய்விட்டுப் பெயர் சொல்லி அழமுடியாது

[காற்றுடன் காற்றெனப் போனீர்கள்
அந்தக் கடலிலும் அலையென ஆனீர்கள்] (2)
வேற்றுடலோடு இங்கு வாருங்கள்
உங்கள் வேரினில் நீர் தெளித்தாடுங்கள்

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

[எதிரிக்கு நீங்களோ வெடிகுண்டு உம்மை இழந்த பின் இருக்கிறோம் இடியுண்டு] (2)
விதியினை மாற்றிய புலியென்று
இங்கு வீசிடும் காற்றிலும் பெயருண்டு

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது

[இந்த மண் யாரிற்கும் பணியாது தமிழீழமண் எதிரிமுன் குனியாது] (2)
பொங்கிடும் உணர்வுகள் உறையாது கரும்புலிகளின் வேகங்கள் குறையாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது
வரும் வார்த்தைகளால் உமைத் தொழமுடியாது
தாயிற்கும் தன் பிள்ளையின் முகம் தெரியாது
எங்கள் தலைமுறை உங்கள் பெயர் அறியாது

வாய்விட்டு பெயர் சொல்லி அழமுடியாது.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.