Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, November 2, 2010

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்
கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்
கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

(கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்
கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்)

எங்கெங்கே அவன் கைதொட்டாலும் அங்கங்கே தனி அழகென்றாகும்
எங்கெங்கே அவன் பணியென்றாலும் தாயகத்தில் தானே மனசிருக்கும்
மண்ணில் வீசும் மண்வாசமாக மனங்கள் எங்கும் கலந்திருப்பான்
இதயமதின் சுவாசத்தைப்போல தேசமெங்கும் நிறைந்திருப்பான்
காதல் கொண்ட மக்களைக்காக்க காவல் செய்த வீரனென்றாவான்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

(கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்
கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்)

ஒற்றைச் சொல்லில் காவியமானான் ஒற்றைக் கல்லில் கோபுரமானான்
காலச்சருகில் கடலும் மறையும் இவனின் பெயரோ அழிவதில்லை
நாளை எங்கள் பள்ளிகள் எல்லாம் இவனின் நாமம் பாடங்களாகும்
காவல் தெய்வம் இவனின் முன்னே கைகள் எடுத்தே நாம் தொழுவோம்
ஈழம் உள்ள காலம் வரையும் நெஞ்சில் இவன் நினைவிருக்கும்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்

கிட்டு எங்கள் காலக்குழந்தை நாளெல்லாம் அவன் பாதங்கள்
கிட்டு எங்கள் போரின் கலைஞன் சன்னங்கள் அவன் எண்ணங்கள்
கிட்டு அவன் பேரைச் சொன்னால் நெஞ்சுக்குள்ளே வீரம் வரும்
சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள் சொல்லுங்கள் தினம் வெல்லுங்கள்.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.