Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, November 2, 2010

நெஞ்சிலே ரத்தம் கொட்டும் நினைவே

நெஞ்சிலே ரத்தம் கொட்டும் நினைவே
நெருப்பாகும் - எங்கள்
நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே
மூத்தமகன் கிட்டு அவன் தோழர்
குட்டிசிறி மலரவன் ஜீவா குணசீலன்
றொகானுடன் நாயகன் தூயவன்
நல்லவன் அமுதனும் இந்திய துரோகத்தால்
கனலான செய்தியில்
நெஞ்சிலே ரத்தம் கொட்டும்
நினைவே நெருப்பாகும் - எங்கள்
நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே
எங்கள்
நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே

கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

தேசவிடுதலைக்காய் தேசமெல்லாம் திரிந்த எங்கள்
நேசக் குழந்தைகளை நீசர் வழிமறிக்க(2)
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

உலக கடற்பரப்பில் இந்தியப் பேயாட்சி
உண்மையைத் தின்னுமா? உலகம் மௌனமாகுமா?(2)
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

தாயகப் பயணத்திலே தம்பி கிட்டு தோழருடன்
தியாக வேள்வியிலே தணலாகப் போகையிலும்(2)
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
கடலம்மா.....
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா

வானும் கடற்பரப்பும் உலகமதும் உள்ளவரை
தாயகத் தாகம் தணிவதில்லை எந்த
தடையிலும் பயணம் நிற்பதில்லை(2)

எங்கள் தம்பி கிட்டு தோழர் மீது ஆணையம்மா
எங்கள் தம்பி கிட்டு தோழர் தேசம் நாளைம்மா

நெஞ்சிலே ரத்தம் கொட்டும்
நினைவே நெருப்பாகும் - எங்கள்
நெஞ்சினிய தோழர்களின் தியாகத்திலே.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.