Powered By

THAIMADY.COM

Powered by Blogger

Tuesday, November 2, 2010

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் அவள்
கையில் கூட ஆயுதங்கள் ஏறும்
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை
நான் நீண்டநேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை

ஊர் முழுதும் ஓலம் நான் உறங்கி வெகு காலம்
உறங்கி வெகு காலம் நீ ஓடி வந்தால் போதும்

தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
காவலுக்கு வந்த பேய்கள் கடிக்கும் நாளையில் ..ஒரு காதல் என்ன மாலை என்ன இந்த
வேளையில்
எங்கள் புலி வீரர் அவர் இருக்கும் இடம் போறேன்
இருக்கும் இடம் போறேன் தமிழீழம் வந்தால் வாறேன்
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
தென்றல் வந்து தொட்டுஎன்னைகேலி செய்த்து
நீ செனற இடம் சொன்ன பின்பு வேலி போட்டது

காலம் வந்து சேரும் புலி களத்தில் வாகை சூடும்
களத்தில் வாகை சூடும் என் கழுத்தில் மாலை ஆடும்
தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
தங்க மேனி நொந்து ஈழத்தாய் அழுகின்றாள்
என்தலைவன் இந்த நிலையை பார்த்துத்தான் உருகின்றான்.
எங்கள் மேனி சாகும் இல்லை எதிரி ஆவி போகும்
எதிரி ஆவி போகும் தமிழ் ஈழம் வந்து சேரும்
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்

உன்னை நெஞ்சில் தூங்க வைத்துப்பாட்டு பாடுவேன் எம் உரிமைக்காக நானும் வந்து
படையில் சேருவேன்
வேங்கை தோற்பதில்லை நம்வீரர் சாவதில்லை வீரர் சாவதில்லை எம் விடிவு தூரம்
இல்லை
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்
என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்.

No comments:

Post a Comment

எங்களுடைய இணையத்தள வாசகர்களுக்கு.